பதிவு செய்த நாள்
20 ஏப்2013
00:14
மும்பை:நடப்பு 2012-13ம் பருவத்தில் (அக்.,- செப்.,), நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.40 கோடி பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) அதிகரிக்கும் என, இந்திய பருத்தி கழகம் (சி.ஏ.பீ.,) தெரிவித்து உள்ளது.
தமிழகம்:சி.ஏ.பீ., அமைப்பு சென்ற ஜனவரியில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.30 கோடி பொதிகளாக இருக்கும் என, மதிப்பிட்டிருந்தது.இந்நிலையில், ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், இதன் உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இதையடுத்து, நடப்பு பருவத்தில், ஒட்டு மொத்த அளவில், பருத்தி உற்பத்தி, 3.40 கோடி பொதிகளாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
தற்போதைய நிலையில், வட மண்டலங்களில் (பஞ்சாப், அரியானா மற்றும் ராஜஸ்தான்), பருத்தி உற்பத்தி, 60 லட்சம் பொதிகளாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முதலில், 62 லட்சம் பொதிகளாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டிருந்தது. இதே போன்று, மத்திய மண்டலங்களிலும் (குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம்), பருத்தி உற்பத்தி, 212 லட்சம் பொதிகளிலிருந்து, 179 லட்சம் பொதிகளாக குறையும் என, மதிப்பிடப் பட்டுள்ளது.அதேசமயம், தென் பகுதிகளில், இதன் உற்பத்தி, 76 லட்சம் பொதிகளிலிருந்து, 95 லட்சம் பொதிகளாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மதிப்பீடு:ஒட்டு மொத்த அளவில், நடப்பு பருவத்தில், நாட்டின் பருத்தி அளிப்பு, 4.05 கோடி பொதிகளாக (கையிருப்பையும் சேர்த்து) குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, முதலில், 4.13 கோடி பொதிகளாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆலைகளின் பருத்தி பயன்பாடு, 2.23 கோடி பொதிகளிலிருந்து, 2.45 கோடி பொதிகளாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம், நாட்டின் பருத்தி ஏற்றுமதி, 1.30 கோடி பொதிகளிலிருந்து, 81 லட்சம் பொதி களாக இருக்கும் என, சி.ஏ.பீ., மேலும் தெரிவித்துள்ளது.சென்ற பிப்ரவரி மாதம் முதல், சீனாவில் பருத்திக்கான தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, உள்நாட்டு சந்தைகளில், இதன் விலை, 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.எனவே, உள் நாட்டில், இதன் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய பருத்தி கழகம், கையிருப்பில் இருந்து, வெளிச் சந்தையில், 2.50 லட்சம் பொதிகளை விற்பனை செய்யும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|