பதிவு செய்த நாள்
20 ஏப்2013
00:15
மும்பை:நாட்டின் தங்கம் இறக்குமதி, நடப்பு 2013-14ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 183.60 டன்னாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 153 டன்னாக இருந்தது. ஆக, தங்கம் இறக்குமதி, நடப்பு காலாண்டில், 20 சதவீதம் அதிகரிக்கும் என, மும்பை தங்கம், வெள்ளி சந்தை கூட்டமைப்பின் தலைவர் மோஹித் காம்போஜ் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களில், தங்கத்தின் விலையில் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்ற ஐந்து தினங்களில், தங்கத்தின் விலை, சவரனுக்கு, 2,500 ரூபாய்க்கும், மேல் வீழ்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தி, இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, வெகுவாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாடு தழுவிய அளவில், தங்கம் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
இருப்பினும், நடப்பு ஏப்ரல் மாதத்தில், இது வரையிலுமாக, தங்கம் இறக்குமதி, 53.25 டன்னாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை (71 டன்) காட்டிலும், 25 சதவீதம் குறைவாகும்.எனினும், ஒட்டு மொத்த அளவில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், தங்கம் இறக்குமதி, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும், தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பை குறைத்து உள்ளது.அதாவது, இறக்குமதி செய்யப்படும், 10 கிராம் தங்கத்தின் மதிப்பை, 499 டாலரிலிருந்து, 449 டாலராகவும், ஒரு கிலோ வெள்ளியின் மதிப்பை, 890 டாலரிலிருந்து, 762 டாலராகவும் குறைத்து உள்ளது. இந்த மதிப்பின் அடிப்படையில் தான், சுங்க வரி விதிக்கப்படும்.
தங்கம் விலை சரிவடைந்துள்ளது என்பது, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை பொறுத்தமட்டில், சாதகமான அம்சமாக கருதப்படுகிறது. அதேசமயம், உள்நாட்டில் இதற்கான தேவை அதிகரித்து, அளவின் அடிப்படையிலான இதன் இறக்குமதி, உயரும் என்ற நிலைப்பாடும் உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|