ஈமு கோழிகளை ஆந்திராவில் விற்க தமிழக அரசு பரிசீலனைஈமு கோழிகளை ஆந்திராவில் விற்க தமிழக அரசு பரிசீலனை ... கோழி பண்ணைகள் அமைக்க தமிழக அரசு மானிய உதவி கோழி பண்ணைகள் அமைக்க தமிழக அரசு மானிய உதவி ...
ஹாங்காங் மூலம் சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய இந்திய நிறுவனங்கள் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2013
01:36

புதுடில்லி:இந்திய நிறுவனங்கள், ஹாங்காங்கில் தொழிற்சாலைகளை அமைத்து, அங்கிருந்து பொருட்களை, சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளன.ஏனெனில், சீனா மற்றும் ஹாங்காங் ஆகிய இரு நாடுகளுக்கிடையில், பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில், வரி விதிப்பு இல்லாமல், 1,000 வகையான பொருட்களை ஏற்றுமதி செய்யும் வகையில் ஒப்பந்தம் அமலில் உள்ளது.இதை, சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன.
இதன்படி, இந்திய நிறுவனங்கள், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டுத் திட்டத்தின் மூலம், ஹாங்காங்கில் தொழிற்சாலைகளை அமைத்து, அதன் வாயிலாக, சீனாவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளன.குறிப்பாக, ரசாயனம், வேளாண் பொருட்கள் மற்றும் மருந்து தொழிற்சாலைகளை, ஹாங்காங்கில் அமைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
சீனா, உலக நாடுகளிடம்இருந்து, 1.80 லட்சம் கோடி டாலர் (99 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்து கொள்கிறது. இதில், இந்தியாவின் பங்களிப்பு, 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.குறிப்பாக, சென்ற 2012-13ம் நிதியாண்டில், சீனாவிற்கான, இந்தியாவின் ஏற்றுமதி, 1,500 கோடி டாலர் (82,500 கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது. அதேசமயம், இந்தியா, சீனாவிலிருந்து மேற்கொண்ட இறக்குமதி, 5,500 கோடி டாலராக (3.02 லட்சம் கோடி ரூபாய்) உள்ளது. ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகமாக உள்ளதால், சீனாவுடனான, நம்நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 4,000 கோடி டாலர் (2.20 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் மிகவும் அதிகமாக உள்ளது.
சீன சந்தைகளில், இந்திய ரசாயனம், மருந்து, வேளாண் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு வளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. எனினும், வரி மற்றும் வரியற்ற இனங்களே இப்பொருட்களின் ஏற்றுமதிக்கு மிகப் பெரிய தடை கற்களாக உள்ளன.சீன மற்றும் ஹாங்காங் நாடுகளுக்கிடையில், பொருட்களின் ஏற்றுமதிக்கு முழு வரி விலக்கு உள்ளது. இந்நிலையில், இந்திய நிறுவனங்கள், ஹாங்காங்கில் தொழிற்சாலை அமைத்து, சீனாவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதென்பது சிறப்பானதொரு முடிவாகும் என, வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)