ஹாங்காங் மூலம் சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய இந்திய நிறுவனங்கள் திட்டம்ஹாங்காங் மூலம் சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய இந்திய நிறுவனங்கள் திட்டம் ... நாட்டின் சேவை துறையில்அன்னிய முதலீடு 3.5 சதவீதம் சரிவு நாட்டின் சேவை துறையில்அன்னிய முதலீடு 3.5 சதவீதம் சரிவு ...
கோழி பண்ணைகள் அமைக்க தமிழக அரசு மானிய உதவி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2013
01:38

தமிழகத்தில், ஏழு பின்தங்கிய மாவட்டங்கள் மற்றும் கோழிப் பண்ணைகள் இல்லாத மண்டலங்களில், கோழிப் பண்ணைகள் அமைப்பதை ஊக்குவிக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதன்படி, குறிப்பிட்ட பகுதிகளில், கோழிப்பண்ணை தொகுப்புகள் உருவாக்கப்பட உள்ளன. கோழிப் பண்ணை அமைப்பதற்கான, திட்டச் செலவில், 25 சதவீதத்தை, தமிழக அரசு மானியமாக வழங்கும்.
பயிற்சி:ஒரு தனிநபர், கோழி வளர்ப்பு சார்ந்த ஒரு தொழிலுக்கு, ஒரு முறை மட்டும் மானியம் பெற தகுதி உடையவர் ஆவார். இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு, தமிழ்நாடு கால்நடை மற்றும் பிராணிகள் அறிவியல் பல்கலைக்கழகம் மூலம், வர்த்தக ரீதியில் கோழி வளர்ப்பு மேற்கொள்வது குறித்து, ஐந்து நாள் பயிற்சி வழங்கப்படும்.
தற்போது, மத்திய அரசு, கோழிப்பண்ணை துணிகர முதலீட்டு நிதியத்தின் கீழ், தனி நபர்களுக்கு, நபார்டு வங்கி மூலம், 25 சதவீத மானிய உதவியை வழங்கி வருகிறது.இதனுடன் இணைந்து, நபார்டு மற்றும் பொதுத் துறை வங்கிகள் வாயிலாக, கோழிப்பண்ணை ஊக்குவிப்பு திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம்:தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டம், முட்டை ஏற்றுமதியில், நாட்டின் மிகப் பெரிய மையமாக விளங்குகிறது. இந்தியாவில், முட்டை உற்பத்தியில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.தமிழகத்தின் மேற்கு பகுதிகளில், கோழிப்பண்ணை விவசாயம், வர்த்தக ரீதியில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, நாமக்கல் பகுதி, முட்டைக் கோழிகளுக்கும், பல்லடம் பிராந்தியம், கறிக்கோழிகளின் உற்பத்திக்கும், முக்கிய மையங்களாக விளங்குகின்றன.சென்ற நிதியாண்டில், தமிழகத்தின் முட்டை உற்பத்தி, முந்தைய நிதியாண்டை விட, 3 சதவீதம் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழக அரசின் திட்டப்படி, பின்தங்கிய ஏழு மாவட்டங்களில், கோழிப்பண்ணை தொகுப்புகள் அமையும்பட்சத்தில், அது சார்ந்த வர்த்தகம் பரவலாகும். மேலும், பின் தங்கிய பகுதியை சேர்ந்த மக்களின் பொருளாதாரமும் வளர்ச்சி காணும்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)