பதிவு செய்த நாள்
25 ஏப்2013
00:37
புதுடில்லி:ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா (எஸ்.ஐ.டி.பி) திட்டத்தின் கீழ், அமைக்கப்பட்டுள்ள, 61 புதிய ஜவுளி பூங்காக்கள் வாயிலாக, 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய பூங்காக்கள், 27,562 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 40 ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கான திட்டம் துவங்கப்பட்டது. இதில், தற்போது, 25 ஜவுளி பூங்காக்கள் செயல்படத் துவங்கி யுள்ளன. மீதமுள்ள, 15 பூங்காக்கள், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும் என, எதிர் பார்க் கப்படுகிறது.
12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், மீதமுள்ள, 21 ஜவுளி பூங்காக்களை அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட் டுள் ளது. இதையடுத்து,வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, இப்பூங்காக்களை அமைப்பதற்கான திட்டத்தினை துவங்கி வைத்தார்.21 புதிய பூங்காக்களில், மகாராஷ்டிராவில் மட்டும், 6 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், ராஜஸ்தானில், 4 பூங்காக்களும், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தலா, 2 பூங்காக்களும் அமைக்கப்பட உள்ளன. இவை தவிர, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், திரிபுரா, கர்நாடகா, குஜராத், இமாச்சல் பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் தலா, 1 பூங்கா அமைய உள்ளது.
எஸ்.ஐ.டி.பி., திட்ட ஜவுளி பூங்காக்களில், ஆடை தொழிற்சாலைகளை அமைக்கும் வகையில், நடப்பு நிதியாண்டின் பட்ஜெட்டில்,ஒவ்வொரு பூங்காவிற்கும், தலா, 10 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|