இந்தியா - பாகிஸ்தான் பரஸ்பர வர்த்தகம் 212 கோடி டாலர்இந்தியா - பாகிஸ்தான் பரஸ்பர வர்த்தகம் 212 கோடி டாலர் ... பொது தேர்தலுக்கு முன்பாக சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும் பொது தேர்தலுக்கு முன்பாக சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும் ...
வர்த்தகம் » ஜவுளி
ஜவுளி பூங்காக்கள் மூலம் 10 லட்சம் வேலை வாய்ப்புகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2013
00:37

புதுடில்லி:ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா (எஸ்.ஐ.டி.பி) திட்டத்தின் கீழ், அமைக்கப்பட்டுள்ள, 61 புதிய ஜவுளி பூங்காக்கள் வாயிலாக, 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய பூங்காக்கள், 27,562 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 40 ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கான திட்டம் துவங்கப்பட்டது. இதில், தற்போது, 25 ஜவுளி பூங்காக்கள் செயல்படத் துவங்கி யுள்ளன. மீதமுள்ள, 15 பூங்காக்கள், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும் என, எதிர் பார்க் கப்படுகிறது.
12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், மீதமுள்ள, 21 ஜவுளி பூங்காக்களை அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட் டுள் ளது. இதையடுத்து,வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, இப்பூங்காக்களை அமைப்பதற்கான திட்டத்தினை துவங்கி வைத்தார்.21 புதிய பூங்காக்களில், மகாராஷ்டிராவில் மட்டும், 6 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், ராஜஸ்தானில், 4 பூங்காக்களும், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தலா, 2 பூங்காக்களும் அமைக்கப்பட உள்ளன. இவை தவிர, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், திரிபுரா, கர்நாடகா, குஜராத், இமாச்சல் பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் தலா, 1 பூங்கா அமைய உள்ளது.
எஸ்.ஐ.டி.பி., திட்ட ஜவுளி பூங்காக்களில், ஆடை தொழிற்சாலைகளை அமைக்கும் வகையில், நடப்பு நிதியாண்டின் பட்ஜெட்டில்,ஒவ்வொரு பூங்காவிற்கும், தலா, 10 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)