அன்னிய நேரடி முதலீடு ரூ.1.98 லட்சம் கோடியாக அதிகரிக்கும்அன்னிய நேரடி முதலீடு ரூ.1.98 லட்சம் கோடியாக அதிகரிக்கும் ... இந்தியா - வங்கதேசம் கடல் வழி சரக்கு போக்குவரத்துஅடுத்த மாதம் சோதனை ஓட்டம் துவங்குகிறது இந்தியா - வங்கதேசம் கடல் வழி சரக்கு போக்குவரத்துஅடுத்த மாதம் சோதனை ஓட்டம் ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.12,300 கோடி நிலுவை:திண்டாடும் சர்க்கரை ஆலைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2013
01:36

லக்னோ:சர்க்கரை மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னரும், கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை வழங்க முடியாமல், பல சர்க்கரை ஆலைகள் திணறி வருகின்றன.
சர்க்கரை ஆலைகள், அவற்றின் முழு உற்பத்தியை சந்தையில் விற்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், சர்க்கரை ஆலைகளின் பணப் புழக்கம் அதிகரித்து, கரும்பு விவசாயிகள், நிலுவைத் தொகையை உடனடியாக பெற வழி வகுக்கப்பட்டுள்ளது.
வரத்து அதிகரிப்பு:இருந்தபோதிலும், சந்தையில் சர்க்கரை வரத்து அதிகரித்து, அதன் விலை குறைந்துள்ளதால், சர்க்கரை விற்பனையில், ஆலைகள் இழப்பை சந்தித்து வருகின்றன. இதனால், கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை வழங்குவதில், இடர்பாடு ஏற்பட்டுள்ளது.சென்ற மார்ச் 15ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு, சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, 12,300 கோடி ரூபாயாக உள்ளது.இதில், உத்தரபிரதேச சர்க்கரை ஆலைகள், 7,100 கோடி ரூபாய் நிலுவையுடன், முதலிடத்தில் உள்ளன. அடுத்த இடங்களில், கர்நாடகா (1,700 கோடி ரூபாய்), மகாராஷ்டிரா (800 கோடி ரூபாய்), குஜராத் (350 கோடி ரூபாய்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
சந்தையில் சர்க்கரை வரத்து அதிகரித்துள்ள போதிலும், அதற்கான தேவை குறைந்துள்ளது. இதனால், சர்க்கரை விலை வீழ்ச்சி கண்டுள்ளது. அதே சமயம், சர்க்கரை மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டதால், அவற்றை இருப்பில் வைத்து, தேவை அதிகமாகும் போது விற்க, சில ஆலைகள் முடிவு செய்துள்ளன.ஆனால், பெரும்பாலான ஆலைகள், சந்தையில் சர்க்கரையை விற்பனை செய்து, உடனடியாக பணம் பெற்று வருகின்றன.
இத்தகைய செயல்பாடு, சந்தையில் சர்க்கரை விலை வீழ்ச்சிக்கு மேலும் வழி வகுத்துள்ளது. சில ஆலைகள், இழப்பை பொருட்படுத்தாமல், சர்க்கரையை விற்பனை செய்து வருகின்றன.சர்க்கரையை இருப்பில் வைத்துள்ள ஆலைகள், சந்தையில் விலை மேலும் குறையும் என்ற அச்சத்தால், வரும் நாட்களில் கையிருப்பு சர்க்கரையை விற்பனை செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுப்பாடு நீக்கம்:எந்த நோக்கத்திற்காக, சர்க்கரை மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டதோ, அதற்கு நேர்மாறான நிலை தற்போது காணப்படுகிறது.சர்க்கரை ஆலைகள், சர்க்கரையை இருப்பு வைக்கவோ, விற்கவோ முடியாமல்,அதே சமயம், விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை தரவும் முடியாத இக்கட்டான நிலையில் உள்ளன என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)