பதிவு செய்த நாள்
02 மே2013
00:21
புதுடில்லி:குறைந்த விலையில், மிக அதிகளவில், வியட்நாம் நாட்டிலிருந்து முந்திரி இறக்குமதியாவதை, தடுத்து நிறுத்திடும் வகையில், இதன் இறக்குமதி மீதான வரியை, தற்போதைய, 30 சதவீதத்திலிருந்து, 70 சதவீதமாக, மத்திய அரசு அதிகரித்துள்ளது.
வியட்நாம் நாட்டிலிருந்து, உடைக்கப்பட்ட, ஒரு கிலோ முந்திரி, 60-200 ரூபாய் என்ற அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், உள்நாட்டில் இத்தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதை, தடுத்து நிறுத்திடும் வகையிலேயே, முந்திரி இறக்குமதி மீதான வரி இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில், ஒரு கிலோ முந்திரி விலை, 350 ரூபாய் என்ற அளவில் விற்கப்படும் நிலையில், வியட்நாம் நாடு, உடைந்த முந்திரியை, மிக குறைந்த விலையில், இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இதுவரையிலுமாக, வியட்நாமிலிருந்து, 5,000-6,000 டன் உடைந்த முந்திரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேசமயம், முந்திரி கொட்டை இறக்குமதி மீதான, வரி விதிப்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பல உள்நாட்டு நிறுவனங்கள், முந்திரி கொட்டையை இறக்குமதி செய்து, அதை பதப்படுத்தி, ஏற்றுமதி செய்து வருகின்றன. எனவே, முந்திரி கொட்டை இறக்குமதி மீதான வரி விதிப்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|