ஊட்டச் சத்து உர மானியத்திற்குமத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்ஊட்டச் சத்து உர மானியத்திற்குமத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் ... டப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதமாக குறையும்: மான்டேக் டப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதமாக குறையும்: மான்டேக் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
முந்திரி இறக்குமதி வரி 70 சதவீதமாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2013
00:21

புதுடில்லி:குறைந்த விலையில், மிக அதிகளவில், வியட்நாம் நாட்டிலிருந்து முந்திரி இறக்குமதியாவதை, தடுத்து நிறுத்திடும் வகையில், இதன் இறக்குமதி மீதான வரியை, தற்போதைய, 30 சதவீதத்திலிருந்து, 70 சதவீதமாக, மத்திய அரசு அதிகரித்துள்ளது.
வியட்நாம் நாட்டிலிருந்து, உடைக்கப்பட்ட, ஒரு கிலோ முந்திரி, 60-200 ரூபாய் என்ற அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், உள்நாட்டில் இத்தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதை, தடுத்து நிறுத்திடும் வகையிலேயே, முந்திரி இறக்குமதி மீதான வரி இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில், ஒரு கிலோ முந்திரி விலை, 350 ரூபாய் என்ற அளவில் விற்கப்படும் நிலையில், வியட்நாம் நாடு, உடைந்த முந்திரியை, மிக குறைந்த விலையில், இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இதுவரையிலுமாக, வியட்நாமிலிருந்து, 5,000-6,000 டன் உடைந்த முந்திரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேசமயம், முந்திரி கொட்டை இறக்குமதி மீதான, வரி விதிப்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பல உள்நாட்டு நிறுவனங்கள், முந்திரி கொட்டையை இறக்குமதி செய்து, அதை பதப்படுத்தி, ஏற்றுமதி செய்து வருகின்றன. எனவே, முந்திரி கொட்டை இறக்குமதி மீதான வரி விதிப்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)