பதிவு செய்த நாள்
04 மே2013
00:41
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், சென்ற ஏப்ரல் மாதத்தில், 3.57 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. இது, இந்நிறுவனம் உற்பத்தி செய்ய நிர்ணயித்த அளவான, 3.51 கோடி டன்னை காட்டிலும் அதிகமாகும்.இதே மாதத்தில், இந்நிறுவனம், 3.98 கோடி டன் நிலக்கரியை விற்பனை செய்துள்ளது. இது, விற்பனை இலக்கு அளவான, 4 கோடி டன்னை விட, சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டில், இந்நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, 48.20 கோடி டன்னாகவும், விற்பனை 49.20 கோடி டன்னாகவும் இருக்கும் வகையில், மத்திய நிலக்கரி அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.சென்ற நிதியாண்டில், கோல் இந்தியா நிறுவனம், 45.25 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. எனினும், இது, இலக்கு அளவான, 46.40 கோடி டன்னை காட்டிலும் குறைவாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|