பதிவு செய்த நாள்
13 மே2013
00:28
புதுடில்லி:தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் வருவாய், சென்ற டிசம்பருடன் முடிந்த நான்காவது காலாண்டில், 2.67 சதவீதம் சரிவடைந்து உள்ளது.மாதாந்திர அடிப்படையில், அலைபேசி சேவைக்காக நுகர்வோர் செலவிடுவது, 3 சதவீதம் அதிகரித்துள்ள போதிலும், தொலை தொடர்பு சேவை நிறுவனங்களின் வருவாய் குறைந்துள்ளது என, "டிராய்' அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின், மொத்த வருவாய், 0.15 சதவீதம் குறைந்து, 52,858 கோடி ரூபாயாக உள்ளது.
இதே காலத்தில், இந்நிறுவனங்களின் இதர செலவினங்கள், நீங்கலான மொத்த வருவாய், 2.67 சதவீதம் குறைந்து, 34,527 கோடி ரூபாயாக உள்ளது.இதே காலத்தில், இணையதள சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 5.49 சதவீதம் உயர்ந்து, 2.53 கோடி என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, முந்தைய செப்டம்பருடன் முடிந்த காலாண்டில், 2.40 கோடியாக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், இந்திய தொலை தொடர்பு சேவைத் துறை, 4.20 கோடி சந்தாதாரர்களை இழந்து உள்ளது.இதே காலத்தில், சாதாரண தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 93.77 கோடியில் இருந்து, 89.55 கோடியாக குறைந்துள்ளது
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|