பதிவு செய்த நாள்
13 மே2013
00:30
புதுடில்லி:இந்தியா - இலங்கை இடையிலான பரஸ்பர வர்த்தகம், வரும், 2016ம் ஆண்டில், 1,000 கோடி டாலராக (55 ஆயிரம் கோடி ரூபாய்) உயரும் என, இந்தியாவிற்கான இலங்கையின் துணை தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்தார்.கடந்த, 2012ம் ஆண்டில், இந்தியா - இலங்கை இடையிலான பரஸ்பர வர்த்தகம், 400 கோடி டாலராக இருந்தது. இரு நாடுகளுக்கு இடையே, பிரகாசமான, மிகச் சிறந்த பொருளாதார உறவு உள்ளது.
இந்தியாவில் இருந்து வாகன உதிரிபாகங்கள், தானியங்கள், காகிதப் பொருட்கள் ஆகியவை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இலங்கை, இந்தியாவில் இருந்து ஜவுளிகள், நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்து கொள்கிறது.இந்திய நிறுவனங்கள், இலங்கையை மையமாக கொண்டு, தங்கள் பொருட்களை, இதர ஆசிய, ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
இலங்கையின் அடிப்படை கட்டமைப்பு, சுற்றுலா மற்றும் சேவைகள் துறைகளில், இந்திய நிறுவனங்களுக்கு முதலீட்டு வாய்ப்பு அதிகம் உள்ளது. வரும், 2016ம் ஆண்டு, இரு நாடுகளின் பரஸ்பர வர்த்தகத்தை, 1,000 கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.இதற்கு, வரி விலக்கு கொள்கையை இரு நாடுகளும் பரஸ்பரம் கடைபிடிக்க வேண்டும். வரி விதிப்பில் உள்ள வேறுபாடுகள் களையப்பட்டால், பரஸ்பர வர்த்தக இலக்கை சுலபமாக எட்டிவிடலாம் என, கரியவாசம் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|