பதிவு செய்த நாள்
17 மே2013
01:56
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக்கிழமையன்றும் ஓரளவிற்கு நன்கு இருந்தது. சில்லரை முதலீட்டாளர்கள், பங்குகளில் ஆர்வத்துடன் முதலீடு மேற்கொண்டதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தன.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், எண்ணெய், எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், நுகர் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 34.37 புள்ளிகள் அதிகரித்து, 20,247.33 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,326.48 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,162.12 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹிண்டால்கோ, சிப்லா, ரிலையன்ஸ் உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், ஐ.டி.சி., டாட்டா மோட்டார்ஸ், ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 23.15 புள்ளிகள் உயர்ந்து, கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவாக, 6,169.90 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,187.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,128.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|