எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு குறைகிறதுஎண்ணெய் நிறுவனங்களின் இழப்பு குறைகிறது ... அலைபேசி வாடிக்கையாளர் 66.44 கோடியாக உயர்வு அலைபேசி வாடிக்கையாளர் 66.44 கோடியாக உயர்வு ...
கைவினை பொருட்கள் ஏற்றுமதி13 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2013
01:58

புதுடில்லி:இந்தியாவின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி, நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், 13 சதவீதம் அதிகரித்து, 26 கோடி டாலராக (1,430 கோடி ரூபாய்) அதிகரித்து உள்ளது.இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 23 கோடி டாலராக (1,265 கோடி ரூபாய்) இருந்தது என, கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இ.பி.சி.எச்.,) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், கவரிங் நகைகள் ஏற்றுமதி, 40.6 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, மரச் சாமான்கள் (35.2 சதவீதம்), கலைநயத்துடன் கூடிய சால்வைகள் (29.3 சதவீதம்), கையினால் அச்சிடப்பட்ட ஜவுளி ரகங்கள் (10 சதவீதம்) ஆகியவற்றின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளன.சென்ற, 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி, 330 கோடி டாலர் என்ற இலக்கை எட்டியுள்ளது.
அமெரிக்காவில், இந்திய கைவினை பொருட்களுக்கான தேவை, சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அந்நாட்டிடம் இருந்து, அதிகளவில் ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன.இதே போன்று, சீனா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளிலும், இந்திய கைவினைப் பொருட்களுக்கு தேவை அதிகரித்து உள்ளது.
அதேசமயம், ஐரோப்பிய நாடுகளில், இதற்கான தேவை இன்னும் மந்த நிலையில் உள்ளது என, இ.பி.சி.எச்.,யின் நிர்வாக இயக்குனர் ராகேஷ்குமார் தெரிவித்தார்.
நம்நாட்டின் ஒட்டு மொத்த கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு, 60 சதவீதம் என்ற அளவில் உள்ளது.கைவினை பொருட்கள் துறையில், 10 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். மொரதாபாத், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகியவை கைவினை பொருட்கள் தயாரிப்பில், முக்கிய மையங்களாக உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)