பதிவு செய்த நாள்
17 மே2013
01:58
புதுடில்லி:இந்தியாவின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி, நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், 13 சதவீதம் அதிகரித்து, 26 கோடி டாலராக (1,430 கோடி ரூபாய்) அதிகரித்து உள்ளது.இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 23 கோடி டாலராக (1,265 கோடி ரூபாய்) இருந்தது என, கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இ.பி.சி.எச்.,) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், கவரிங் நகைகள் ஏற்றுமதி, 40.6 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, மரச் சாமான்கள் (35.2 சதவீதம்), கலைநயத்துடன் கூடிய சால்வைகள் (29.3 சதவீதம்), கையினால் அச்சிடப்பட்ட ஜவுளி ரகங்கள் (10 சதவீதம்) ஆகியவற்றின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளன.சென்ற, 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி, 330 கோடி டாலர் என்ற இலக்கை எட்டியுள்ளது.
அமெரிக்காவில், இந்திய கைவினை பொருட்களுக்கான தேவை, சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அந்நாட்டிடம் இருந்து, அதிகளவில் ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன.இதே போன்று, சீனா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளிலும், இந்திய கைவினைப் பொருட்களுக்கு தேவை அதிகரித்து உள்ளது.
அதேசமயம், ஐரோப்பிய நாடுகளில், இதற்கான தேவை இன்னும் மந்த நிலையில் உள்ளது என, இ.பி.சி.எச்.,யின் நிர்வாக இயக்குனர் ராகேஷ்குமார் தெரிவித்தார்.
நம்நாட்டின் ஒட்டு மொத்த கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு, 60 சதவீதம் என்ற அளவில் உள்ளது.கைவினை பொருட்கள் துறையில், 10 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். மொரதாபாத், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகியவை கைவினை பொருட்கள் தயாரிப்பில், முக்கிய மையங்களாக உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|