பதிவு செய்த நாள்
20 மே2013
00:54
தமிழக அரசு சரியான முடிவெடுக்காததால், இலவச வினியோகத் திட்டத்திற்காக, 22.82 கோடி ரூபாயில் வாங்கிய, 95 ஆயிரம் கலர் "டிவி'க்கள் முடங்கியுள்ளன.தமிழக அரசு, ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும், இலவசமாக "டிவி' வழங்கும் திட்டத்தை, 2006ல், அறிவித்தது. 2006 முதல், 2011 வரையிலான காலத்தில், "எல்காட்' நிறுவனத்திடமிருந்து, 3,907 கோடி ரூபாயில், 1.65 கோடி கலர் "டிவி'க்கள் கொள்முதல் செய்யப்பட்டு, வருவாய்த்துறை மூலம் வினியோகிக்கப்பட்டது.
சட்டசபை தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள், 2011 மார்ச் முதல் அமலுக்கு வந்ததால், 1.27 லட்சம் "டிவி'க்கள் வினியோகம் செய்யப்படாமல் முடங்கின.இவை, பள்ளிகள், மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், அனாதை இல்லங்களுக்கு வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.இதற்கான அரசாணையும் பிறக்கப்பட்டது. ஆனாலும், 95,725 "டிவி'க்களை வினியோகிக்க, எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவை அப்படியே முடங்கியுள்ளன.
இவற்றின் மதிப்பு, 22.82 கோடி ரூபா#. இதில், 20,106 "டிவி'க்கள் பழுதடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த தகவல்கள், 2012ம் ஆண்டுக்கான தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், "டிவி'க்கள் எந்தநோக்கத்திற்காக வாங்கப்பட்டதோ, அதற்கு வழங்காமல், ஒரு பகுதி, பிற நோக்கங்களுக்காக வழங்கப்பட்டு உள்ளன. பழுதடைந்த "டிவி'க்களை, "எல்காட்' நிறுவனத்திடம் கொடுத்து சரி செய்யவோ, மாற்றவோ அரசு, நடவடிக் கை எடுக்க தவறிவிட்டது என்றும், தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.- நமது நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|