விவசாயிகளின் மனுக்களைபரிசீலிக்காததால் ரூ.53 கோடி முடக்கம்விவசாயிகளின் மனுக்களைபரிசீலிக்காததால் ரூ.53 கோடி முடக்கம் ... ஏற்றுமதியை மேம்படுத்தவெளியுறவு அமைச்சகம் திட்டம் ஏற்றுமதியை மேம்படுத்தவெளியுறவு அமைச்சகம் திட்டம் ...
95 ஆயிரம் "டிவி'க்கள் வினியோகிக்காமல் முடக்கம்:பழுதானதை மாற்றாததும் அம்பலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2013
00:54

தமிழக அரசு சரியான முடிவெடுக்காததால், இலவச வினியோகத் திட்டத்திற்காக, 22.82 கோடி ரூபாயில் வாங்கிய, 95 ஆயிரம் கலர் "டிவி'க்கள் முடங்கியுள்ளன.தமிழக அரசு, ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும், இலவசமாக "டிவி' வழங்கும் திட்டத்தை, 2006ல், அறிவித்தது. 2006 முதல், 2011 வரையிலான காலத்தில், "எல்காட்' நிறுவனத்திடமிருந்து, 3,907 கோடி ரூபாயில், 1.65 கோடி கலர் "டிவி'க்கள் கொள்முதல் செய்யப்பட்டு, வருவாய்த்துறை மூலம் வினியோகிக்கப்பட்டது.
சட்டசபை தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள், 2011 மார்ச் முதல் அமலுக்கு வந்ததால், 1.27 லட்சம் "டிவி'க்கள் வினியோகம் செய்யப்படாமல் முடங்கின.இவை, பள்ளிகள், மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், அனாதை இல்லங்களுக்கு வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.இதற்கான அரசாணையும் பிறக்கப்பட்டது. ஆனாலும், 95,725 "டிவி'க்களை வினியோகிக்க, எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவை அப்படியே முடங்கியுள்ளன.
இவற்றின் மதிப்பு, 22.82 கோடி ரூபா#. இதில், 20,106 "டிவி'க்கள் பழுதடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த தகவல்கள், 2012ம் ஆண்டுக்கான தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், "டிவி'க்கள் எந்தநோக்கத்திற்காக வாங்கப்பட்டதோ, அதற்கு வழங்காமல், ஒரு பகுதி, பிற நோக்கங்களுக்காக வழங்கப்பட்டு உள்ளன. பழுதடைந்த "டிவி'க்களை, "எல்காட்' நிறுவனத்திடம் கொடுத்து சரி செய்யவோ, மாற்றவோ அரசு, நடவடிக் கை எடுக்க தவறிவிட்டது என்றும், தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.- நமது நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)