தமிழகத்தில் முட்டை விலை302 காசுகளாக நிர்ணயம்தமிழகத்தில் முட்டை விலை302 காசுகளாக நிர்ணயம் ... நிதி அமைச்சகம் ரூ.1 லட்சம் கோடிஎரிபொருள் மானியம் வழங்க ஒப்புதல் நிதி அமைச்சகம் ரூ.1 லட்சம் கோடிஎரிபொருள் மானியம் வழங்க ஒப்புதல் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
விலை சரிவால் சர்க்கரை ஆலைகளின் லாபம் குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2013
23:58

புதுடில்லி:உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் விலை குறைவால், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-ஆக.,), சர்க்கரை ஆலைகளின் செயல்பாட்டு லாபம், குறைய வாய்ப்புள்ளது என, தரக்குறியீட்டு நிறுவனமான, "இக்ரா' தெரிவித்துள்ளது.
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் ஏற்பட்ட வறட்சியால், கரும்பு உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், சர்க்கரை ஆலைகளில், கரும்பு அரவை குறைந்துள்ளது. அதேசமயம், உத்தரபிரதேசம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில், அதிகளவில் கரும்பு அரவைக்கு வந்து கொண்டுள்ளது.இருப்பினும், ஒட்டு மொத்த அளவில், சர்க்கரை ஆலைகளின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. அதேசமயம், இதன் விலை குறைந்து வருகிறது. இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இத்துறை நிறுவனங்களின் லாப வரம்பு குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு, சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை, நீக்கியுள்ளது. இதனால், சர்க்கரை ஆலைகளின் ரொக்க வரத்து அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சர்க்கரையின் விலை குறைந்துள்ளது. இது, இந்நிறு வனங்களுக்கு இடர்பாட்டை ஏற்படுத்தும்.
நடப்பு பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.40-2.45 கோடி டன்னாக இருக்கும்என, மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 2011-12ம் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.60 கோடி டன்னாக மிகவும் அதிகரித்திருந்தது.
இந்நிலையில், நடப்பு பருவத்தில், உள்நாட்டில் சர்க்கரைக்கான தேவை, 2.35 கோடி டன்னாக இருக்கும். இதையடுத்து, 50-60 லட்சம் டன் சர்க்கரை, உபரியாக இருக்கும். இது, மூன்று மாத தேவையை பூர்த்தி செய்யும் அளவாகும் என, "இக்ரா' நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)