பதிவு செய்த நாள்
27 மே2013
00:36
சர்வதேச சந்தையை விட, உள்நாட்டில், கோதுமை விலை உயர்ந்து உள்ளதால், நடப்பு நிதியாண்டில் அதன் ஏற்றுமதி குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.உலகில், கோதுமை உற்பத்தியில், இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்ற, 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி, 53 லட்சம் டன்னாக இருந்தது.நடப்பு நிதியாண்டில், கோதுமை விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில், அதனை அதிக அளவில் விவசாயிகள் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர். இதனால், உள்நாட்டில் கோதுமை விலை உயர்ந்துள்ளது. உள்நாட்டில் கோதுமை விலை உயர்வால், அதன் ஏற்றுமதியும்பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை விட, ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் கோதுமை விலை குறைவாக உள்ளது. இதனால், அந்நாடுகளில் இருந்து, கோதுமையை இறக்குமதி செய்வது லாபகரமானது என, பல நாடுகள் கருதுகின்றன.இதுகுறித்து, ஐ.டி.சி., நிறுவனத்தின் வர்த்தக பிரிவின் தலைமை செயல் அதிகாரி ரஜனிகாந்த் ராய் கூறியதாவது:கோதுமை விலை, டன்னுக்கு, 1,000 ரூபாய் குறையவேண்டும் அல்லது அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, 10 சதவீதம் சரிய வேண்டும். அப்படி நடக்காத பட்சத்தில், நடப்பு நிதியாண்டில், கோதுமை ஏற்றுமதி, 15 லட்சம் டன் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|