பதிவு செய்த நாள்
28 மே2013
00:36
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, "ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செயில்)' நிறுவனம், 61,870 கோடி ரூபாய் திட்ட செலவில், விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், இந்நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, கூடுதலாக, 60 லட்சம் டன் அதிகரித்து, 1.95 கோடி டன்னாக உயரும் என, இந்நிறுவனத்தின் தலைவர் சி.எஸ்.வர்மா தெரிவித்தார்.
நிறுவனத்திற்கு, ஐந்து உருக்காலைகள் உள்ளன. இவற்றுள், துர்காபூர், ரூர்கேலா, பரன்பூர் ஆகிய மூன்று தொழிற்சாலைகளின் விரிவாக்கப் பணிகளின் பெரும் பகுதி, நடப்பு நிதியாண்டில் நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது, நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, ஆண்டுக்கு, 1.38 கோடி டன் என்ற அளவில் உள்ளது. நிறுவனம், கடந்த 2006 - 07ம் ஆண்டிலிருந்து, அதன் ஐந்து உருக்காலைகளின் உற்பத்தி திறனை, 2.35 கோடி டன்னாக உயர்த்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.வரும் 2014 - 15ம் நிதியாண்டிற்குள், நிறுவனத்தின், ஐந்து உருக்காலைகளின் விரிவாக்கப் பணிகளும், நிறைவடையும் என, எதிர்பார்க்கிறோம், என, வர்மா மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|