பதிவு செய்த நாள்
28 மே2013
00:38
மும்பை:சென்ற 2012 -13ம் நிதியாண்டின், மார்ச்சுடன் முடிந்த கடைசி காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 4.8 சதவீதமாக இருக்கும் என, கிரெடிட் சூசி நிறுவனத்தின் ஆ#வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் விவரம் வருமாறு:சென்ற நிதியாண்டின், முதல் மூன்று காலாண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஒட்டு மொத்த அளவில், 5.1 சதவீதமாக இருந்தது. இது, முதல் காலாண்டில், 5.5 சதவீதம் என்ற உச்சபட்சஅளவிலும், மூன்றாம் காலாண்டில், குறைந்த பட்சமாக 4.5 சதவீதம் என்ற அளவிலும் இருந்தது.இது, நான்காம் காலாண்டில், 4.8 சதவீதமாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில், 5 சதவீதத்திற்கு கீழ் காணப்படும் குறைந்தபட்ச வளர்ச்சியாக இது இருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சென்ற நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த இறுதி அறிக்கையை, வரும், 30ம் @ததி, மத்திய அரசுவெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|