பதிவு செய்த நாள்
28 மே2013
09:12
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.07 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46.38 புள்ளிகள் குறைந்து 20077.15 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 2.40 புள்ளிகள் குறைந்து 6080.75 புள்ளிகளோடு காணப் பட்டது. இந்திய பங்குசந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிந்தன. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் மற்றும் ரிலையன்ஸ், சன் பார்மா போன்ற பங்குகளின் விலை ஏற்றத்தால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 326.44 புள்ளிகள் உயர்ந்து 20,030.77 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 99.60 புள்ளிகள் உயர்ந்து 6,083.15 எனும் அளவிலும் முடிந்தன
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|