தாவர எண்ணெய் இறக்குமதி 1.07 கோடி டன்னாக உயரும்தாவர எண்ணெய் இறக்குமதி 1.07 கோடி டன்னாக உயரும் ... என்.எச்.பி.சி., பங்கு விற்பனைரூ.2,400 கோடி திரட்ட திட்டம் என்.எச்.பி.சி., பங்கு விற்பனைரூ.2,400 கோடி திரட்ட திட்டம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சமையல் எரிவாயுவிலை உயரும் அபாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2013
01:04

புதுடில்லி:எரிவாயு விலையை காலாண்டிற்கு ஒரு முறை, நிர்ணயம் செய்யும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், சமையல் எரிவாயுவின் விலை உயர வாய்ப்புள்ளது.பெட்ரோலிய அமைச்சகம், நடப்பு, 12வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில், உள்நாட்டு இயற்கை எரிவாயுவின் விலையை, குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை நிர்ணயிக்கும் திட்டத்தை தயாரித்துள்ளது.இத்திட்ட வரையறை, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் படி, முந்தைய நான்கு காலாண்டுகளில் காணப்பட்ட எரிவாயு விலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதன் அடிப்படையில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எரிவாயு விலை நிர்ணயிக்கப்படும். புதிய விலை, குறித்த அறிவிப்பு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்படும். இத்திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், நடப்பு, 12வது ஐந்தாண்டு திட்ட காலம், (2012-17) முழுவதும் இத்திட்டம் அமலில் இருக்கும் என, அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது, உள்நாட்டில், 10 லட்சம் யூனிட் எரிவாயுவின் விலை, 4.20 டாலராக உள்ளது. புதிய திட்டப்படி, இதே அளவிலான எரிவாயுவின் விலை, 6.80 டாலரில் இருந்து, 10 டாலராக உயரும்.இவ்வாறு உயரும்பட்சத்தில், சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும். மேலும் வர்த்தக பயன்பாட்டிற்கான எரிவாயுவின் விலையும் உயரும். இதனால் உணவு, போக்குவரத்து @பான்றவற்றுக்கு மக்கள் செலவிடுவது அதிகரிக்கும்.நாட்டின் பெரும்பாலான உர உற்பத்திக்கு, எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. எரிவாயு விலை உயர்வால், உரம் விலை அதிகரிக்கும். இது, பல்வேறு பொருட்களின் விலை உயர்விற்கும் வழி வகுக்கும்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)