பதிவு செய்த நாள்
29 மே2013
01:04
புதுடில்லி:எரிவாயு விலையை காலாண்டிற்கு ஒரு முறை, நிர்ணயம் செய்யும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், சமையல் எரிவாயுவின் விலை உயர வாய்ப்புள்ளது.பெட்ரோலிய அமைச்சகம், நடப்பு, 12வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில், உள்நாட்டு இயற்கை எரிவாயுவின் விலையை, குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை நிர்ணயிக்கும் திட்டத்தை தயாரித்துள்ளது.இத்திட்ட வரையறை, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் படி, முந்தைய நான்கு காலாண்டுகளில் காணப்பட்ட எரிவாயு விலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதன் அடிப்படையில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எரிவாயு விலை நிர்ணயிக்கப்படும். புதிய விலை, குறித்த அறிவிப்பு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்படும். இத்திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், நடப்பு, 12வது ஐந்தாண்டு திட்ட காலம், (2012-17) முழுவதும் இத்திட்டம் அமலில் இருக்கும் என, அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது, உள்நாட்டில், 10 லட்சம் யூனிட் எரிவாயுவின் விலை, 4.20 டாலராக உள்ளது. புதிய திட்டப்படி, இதே அளவிலான எரிவாயுவின் விலை, 6.80 டாலரில் இருந்து, 10 டாலராக உயரும்.இவ்வாறு உயரும்பட்சத்தில், சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும். மேலும் வர்த்தக பயன்பாட்டிற்கான எரிவாயுவின் விலையும் உயரும். இதனால் உணவு, போக்குவரத்து @பான்றவற்றுக்கு மக்கள் செலவிடுவது அதிகரிக்கும்.நாட்டின் பெரும்பாலான உர உற்பத்திக்கு, எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. எரிவாயு விலை உயர்வால், உரம் விலை அதிகரிக்கும். இது, பல்வேறு பொருட்களின் விலை உயர்விற்கும் வழி வகுக்கும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|