தாவர எண்ணெய் இறக்குமதி 1.07 கோடி டன்னாக உயரும்தாவர எண்ணெய் இறக்குமதி 1.07 கோடி டன்னாக உயரும் ... தகுதி வாய்ந்த முதலீட்டு நிறுவனங்களுக்குபங்கு ஒதுக்கீடு: ரூ.15,996 கோடி திரட்டல் தகுதி வாய்ந்த முதலீட்டு நிறுவனங்களுக்குபங்கு ஒதுக்கீடு: ரூ.15,996 கோடி ... ...
என்.எச்.பி.சி., பங்கு விற்பனைரூ.2,400 கோடி திரட்ட திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2013
01:06

புதுடில்லி:பொதுத் துறையை சேர்ந்த, நேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்பரேஷன் (என்.எச்.பி.சி.,) நிறுவனத்தில், 11.36 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 2,400 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த பங்கு வெளியீடு தொடர்பான பணிகளை, மத்திய நிதி அமைச்சகம் துவக்கியுள்ளது.
இதற்காக, பங்கு வெளியீட்டை நிர்வகிக்கும் வர்த்தக வங்கிகளுக்கான, ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.புனல் மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள என்.எச்.பி.சி., நிறுவனத்தில், மத்திய அரசு, 86.36 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. இதில், 11.36 சதவீதம், அதாவது, 120 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. ஒரு பங்கு தற்போது, 20 ரூபாய் என்ற அளவில் கைமாறிக் கொண்டுள்ளது. இதே விலையில், பங்கு வெளியீட்டை மேற்கொண்டால் கூட, 2,400 கோடி ரூபாய் திரட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோரிக்கை அடிப்படையிலான இந்த பங்கு வெளியீட்டில், 10 சதவீதம், என்.எச்.பி.சி., நிறுவன ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும். பங்கு வெளியீட்டு விலையை விட, 5 சதவீதம் குறைந்த தொகைக்கு அவர்களுக்கு பங்குகள் வழங்கப்படும்.சென்ற 2011-12ம் நிதியாண்டு நிலவரப்படி, என்.எச்.பி.சி., நிறுவனத்தின், அளிக்கப்பட்ட பங்கு மூலதனம், 12,301 கோடி ரூபாயாக இருந்தது.மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட அளவிலான பங்குகளை விற்பனை செய்து, 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.சென்ற நிதியாண்டில், ஆயில் இந்தியா, என்.டி.பி.சி., என்.எம்.டீ.சி., இந்துஸ்தான் காப்பர் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட அளவிலான பங்குகளை விற்பனை செய்து, 23,920 கோடி ரூபாயை மத்திய அரசு திரட்டிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)