பதிவு செய்த நாள்
30 மே2013
01:25
மும்பை: சகாரா நிறுவனங்களின் கடன் பத்திரங்களை வைத்துள்ள முதலீட்டாளர்களுக்கு, பணத்தை திரும்ப வழங்கும் பணியை, "செபி' துவக்கியுள்ளது.சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன்,சகாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகிய இரு நிறுவனங்கள், விதிமுறைகளுக்கு மாறாக, முதலீடுகளை பெற்ற வழக்கில், முதலீட்டாளர்களுக்கு, பணத்தை திரும்ப வழங்க, சப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, 2.96 கோடி முதலீட்டாளர்களுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரும்ப வழங்கும் பணி துவங்கியுள்ளது. இது குறித்து, "செபி' வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:சகாரா கடன் பத்திரங்களை வைத்துள்ள முதலீட்டாளர்கள், வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கை துவக்க வேண்டும்.முதலீட்டாளர்கள், பணம் பெறுவதற்கான விண்ணப்பத்தில் போட்டுள்ள கையெழுத்து, அளித்துள்ள விலாசம், இணைத்துள்ள புகைப்படம் ஆகியவை, தங்கள் வங்கி கணக்கில் அளித்துள்ளபடி ஒத்து இருக்க வேண்டும். வங்கியிடம் இதற்கான அத்தாட்சியை பெற்று,சமர்பிக்க வேண்டும்.விண்ணப்பத்தில் வருமான வரி கணக்கு எண்ணை (பான்) தெரிவிக்க வேண்டியது கட்டாயம்ஆகும். முதலீட்டு வருவாய்க்கு ஏற்ப, மூல வரி பிடித்தம் செய்யப்படும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|