தோல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.2,019 கோடியாக அதிகரிப்புதோல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.2,019 கோடியாக அதிகரிப்பு ... நுண்கடன் வழங்கியதில் தமிழகம் முதலிடம் நுண்கடன் வழங்கியதில் தமிழகம் முதலிடம் ...
வைர ஆபரணங்கள் விலை கிடு கிடு...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2013
01:29

புதுடில்லி: சர்வதேச அளவில் கச்சா வைரங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக, வைர நகைகளின் விலை, கிடு கிடு வென உயர்ந்து வருகிறது.சமீப காலமாக தங்கம் விலைசரிந்து வரும் நிலையில், பட்டை தீட்டப்பட்ட வைரம் மற்றும் வைர நகைகள் விலை அதிகரித்து வருவது, இவ்வகை ஆபரணங்களுக்கு பெருகி வரும் வரவேற்பை காட்டுவதாக உள்ளது.
சப்ளை குறைவு

உலகளவில், கச்சா வைரங்களுக்கான தேவை, கடந்த மூன்று ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. ஆனால், தேவைக்கேற்பசப்ளை இல்லாததால், கச்சா வைரங்கள் விலை, ஆண்டுக்கு 18சதவீதம் என்ற அளவில் உயர்ந்து வருகிறது.கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், கச்சா வைரங்கள் விலை, 12சதவீதம் அதிகரித்துள்ளது. உலகில், தங்கத்தை பயன்படுத்துவதில், இந்தியாவும், சீனாவும் முன்னணியில் உள்ளன. தற்போது, இந்த இரு நாடுகளிலும், வைர நகைகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.

அதேசமயம், பெருகி வரும் தேவைக்கேற்ப,சர்வதேச கச்சா வைரங்களின் உற்பத்தி இல்லை. இதனால், மாதந்தோறும், கச்சா வைரங்களின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. வைர உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள டீ பீர்ஸ் நிறுவனம், நடப்பு மே மாதம், 60 கோடி டாலர் மதிப்புள்ள கச்சா வைரங்களை விற்பனை செய்தது. இது, முந்தைய ஏப்ரல் மாதம் விற்பனை செய்த விலையை விட, 4சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத்

இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள், இறக்குமதியாகும் கச்சா வைரங்களை வாங்கி, பட்டை தீட்டி, ஏற்றுமதி செய்கின்றன. சில நிறுவனங்கள், வைர ஆபரணங்களாக உருவாக்கி ஏற்றுமதி செய்து வருகின்றன. சென்ற ஏப்ரல் மாதம், 9,965 கோடி ரூபாய் மதிப்பிலான நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 44சதவீதம் அதிகமாகும். இந்தியாவில், குஜராத் மாநிலத்தில் உள்ள சரத் நகரம், கச்சா வைரங்களை நறுக்கி, பட்டை தீட்டுவதில் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு ஆண்டுக்கு, 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, வர்த்தகம் நடைபெறுகிறது.உள்நாட்டில், வைர நகைகளின் விலை அதிகரிப்பால், அவற்றின் விற்பனைசரிவடைந்துள்ளது. கடந்த இரண்டு மூன்று வாரங்களுக்கு முன், வைர நகைகளின் விற்பனை நன்கு இருந்தது. இது தற்போது, மந்தமடைந்துள்ளது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)