பதிவு செய்த நாள்
30 மே2013
01:29
புதுடில்லி: சர்வதேச அளவில் கச்சா வைரங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக, வைர நகைகளின் விலை, கிடு கிடு வென உயர்ந்து வருகிறது.சமீப காலமாக தங்கம் விலைசரிந்து வரும் நிலையில், பட்டை தீட்டப்பட்ட வைரம் மற்றும் வைர நகைகள் விலை அதிகரித்து வருவது, இவ்வகை ஆபரணங்களுக்கு பெருகி வரும் வரவேற்பை காட்டுவதாக உள்ளது.
சப்ளை குறைவு
உலகளவில், கச்சா வைரங்களுக்கான தேவை, கடந்த மூன்று ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. ஆனால், தேவைக்கேற்பசப்ளை இல்லாததால், கச்சா வைரங்கள் விலை, ஆண்டுக்கு 18சதவீதம் என்ற அளவில் உயர்ந்து வருகிறது.கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், கச்சா வைரங்கள் விலை, 12சதவீதம் அதிகரித்துள்ளது. உலகில், தங்கத்தை பயன்படுத்துவதில், இந்தியாவும், சீனாவும் முன்னணியில் உள்ளன. தற்போது, இந்த இரு நாடுகளிலும், வைர நகைகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
அதேசமயம், பெருகி வரும் தேவைக்கேற்ப,சர்வதேச கச்சா வைரங்களின் உற்பத்தி இல்லை. இதனால், மாதந்தோறும், கச்சா வைரங்களின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. வைர உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள டீ பீர்ஸ் நிறுவனம், நடப்பு மே மாதம், 60 கோடி டாலர் மதிப்புள்ள கச்சா வைரங்களை விற்பனை செய்தது. இது, முந்தைய ஏப்ரல் மாதம் விற்பனை செய்த விலையை விட, 4சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சரத்
இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள், இறக்குமதியாகும் கச்சா வைரங்களை வாங்கி, பட்டை தீட்டி, ஏற்றுமதி செய்கின்றன. சில நிறுவனங்கள், வைர ஆபரணங்களாக உருவாக்கி ஏற்றுமதி செய்து வருகின்றன. சென்ற ஏப்ரல் மாதம், 9,965 கோடி ரூபாய் மதிப்பிலான நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 44சதவீதம் அதிகமாகும். இந்தியாவில், குஜராத் மாநிலத்தில் உள்ள சரத் நகரம், கச்சா வைரங்களை நறுக்கி, பட்டை தீட்டுவதில் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு ஆண்டுக்கு, 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, வர்த்தகம் நடைபெறுகிறது.உள்நாட்டில், வைர நகைகளின் விலை அதிகரிப்பால், அவற்றின் விற்பனைசரிவடைந்துள்ளது. கடந்த இரண்டு மூன்று வாரங்களுக்கு முன், வைர நகைகளின் விற்பனை நன்கு இருந்தது. இது தற்போது, மந்தமடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|