பதிவு செய்த நாள்
04 ஜூன்2013
23:40
மும்பை:பங்கு வியாபாரம், செவ்வாய்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், சில் லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததை அடுத்து, "சென்செக்ஸ்' குறியீட்டு எண், 0.33 சதவீத சரிவுடன் முடிவடைந்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளின் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்பு டன் காணப்பட்டது. இருப்பினும், இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்க வில்லை.
நேற்றைய வர்த்தகத்தில், நுகர்வோர் சாதனங்கள், வங்கி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், மருந்து, மின்சாரம், பொறியியல் பொருட்கள் ஆகிய துறைக ளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 64.70 புள்ளிகள் சரிவடைந்து, 19,545.78 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,742.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,522.47 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா மோட்டார்ஸ், ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டாக்டர் ரெட்டீஸ் லேப், சிப்லா உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 19.85 புள்ளிகள் குறைந்து, 5,919.45 புள்ளிகளில் நிலை பெற்றது.வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,981.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,910.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|