பதிவு செய்த நாள்
06 ஜூன்2013
12:36
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டு மிளகாய் வத்தல் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடலாடி, முதுகுளத்தூர், கமுதி உள்ளிட்ட பகுதிகளில் 22 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் குண்டு மிளகாய் வத்தல் சாகுபடி நடக்கிறது. பருவமழை பொய்ப்பால், கடந்தாண்டை விட நடப்பாண்டு 50 சதவீதம் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு ஒரு டன் வரை கிடைக்க வேண்டிய மகசூல் அதிகபட்சமாக 300 கிலோ வரை மட்டுமே கிடைத்தது. இதனால், மிளகாய் சாகுபடி விவசாயிகளுக்கு பெரிதும் நஷ்டம் ஏற்பட்டது.
பெருசுக்கு மவுசு: நிறம், பருமன் கொண்ட மிளகாய் வத்தலுக்கு மார்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. இது போன்ற மிளகாய் 10 கிலோ 1000 ரூபாய் வரை விற்றது. விளைச்சல் பாதிப்பால், தரம் குறைந்த மிளகாய் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது, இது ரூ.600க்கும், மேலும் தரம் குறைவான மிளகாய் 350 ரூபாய் வரையும் கமிஷன் மண்டி கடைகளில் வாங்கப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|