பதிவு செய்த நாள்
06 ஜூன்2013
13:03
மும்பை : அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்வதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கூட்டம் மும்பையில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, கே.ஜி.டி6 பிளாக்கில் ஏற்கனவே எங்களுக்கு இயற்கை எரிவாயு வளம் இருக்கிறது. தற்போது அதன் அருகில் மேலும் 2 கி.மீ தூரத்திற்கு இயற்கை வளம் இருப்பதை கண்டறிந்துள்ளோம். இது எங்களுடைய தொழிலை மேலும் ஊக்கப்படுத்தும் என நம்புகிறோம். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்கிறது. மேலும் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் நான்காம் தலைமுறையான 4ஜி சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் துவங்கியுள்ளது. சமீபத்தில் தான் பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்தது. இந்தாண்டு இறுதியில் ரிலையன்ஸ் 4ஜி சேவை துவங்கும் என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|