பதிவு செய்த நாள்
06 ஜூன்2013
16:56
மும்பை : வாரத்தின் நான்காம் நாளில் சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் சரிவுடனேயே முடிந்தன. சென்செக்ஸ் 49 புள்ளிகளும், நிப்டி 2.45 புள்ளிகளும் சரிந்தன. அமெரிக்க டாலருக்கு எதிராக தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு, லாபநோக்கோடு ஏர்டெல் மற்றும் இன்போசிஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகளவில் முதலீட்டாளர்கள் விற்றது மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு கூட்ட முடிவில் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி தரும் விதமாக எதிர்பார்த்த அளவு அறிவிப்புகள் ஏதும் இல்லாதது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் இன்று(ஜூன் 6ம் தேதி, வியாழக்கிழமை) சரிவுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 48.73 புள்ளிகள் சரிந்து 19,519.49 என்ற அளவில் முடிந்தது. கடந்த ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகு சென்செக்ஸ் இந்தளவு குறைந்தது இதுவே முதல்முறையாகும். அதேப்போல் தேசிய பங்குசந்தையான நிப்டியும் பெரிய மாற்றம் எதுவும் தரவில்லை. 2.45 புள்ளிகள் சரிந்து 5,921.40 என்ற அளவில் முடிந்தது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் 19 பங்குகளின் விலை சரிந்தும், 10 பங்குகளின் விலை லாபமும் பெற்றன. இன்றைய வர்த்தகத்தில் பார்த்தி ஏர்டெல், சன் பார்மா, இன்போசிஸ், என்.டி.பி.சி., ஆகிய நிறுவன பங்குகள் விலை பெரும் சரிவை சந்தித்தன. இவைகள் தவிர உடல் ஆரோக்கியம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மெட்டல் உள்ளிட்ட நிறுவன தொடர்பான பங்குகள் விலையும் சரிந்து காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|