பதிவு செய்த நாள்
07 ஜூன்2013
00:31
மும்பை:பங்கு வியாபாரம், வியாழக்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததை அடுத்து, "சென்செக்ஸ்' 0.25 சதவீத சரிவுடன் முடிவடைந்தது. நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், பொறியியல் பொருட்கள், மருந்து உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
இருப்பினும், வங்கி துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும், ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 48.73 புள்ளிகள் சரிவடைந்து, 19,519.49 புள்ளிகளில் நிலைப் பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,635.37 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,395.32 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பார்தி ஏர்டெல், சன்பார்மா உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், எஸ்.பீ.ஐ., உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 2.45 புள்ளிகள் குறைந்து, 5,921.40 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,956.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,869.50 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|