பதிவு செய்த நாள்
08 ஜூன்2013
00:08
மும்பை:தங்க நாணயங்களுக்கு கடன் வழங்குவது தொடர்பாக, கூட்டுறவு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி, புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன்படி, வங்கிகள், மாநில, மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவை விற்பனை செய்யும், சிறப்பு வகை தங்க நாணயங்களை பொறுத்தவரை, ஒரு வாடிக்கையாளருக்கு, 50 கிராமிற்குமேல் கடன் வழங்கக் கூடாது.அது மட்டு மின்றி, வங்கிகளின் நிர்வாகக் குழுநிர்ணயித்த வரம்பிற்குள் மட்டுமே தங்க நகைகள் மற்றும் தங்க நாணயங் களுக்கு கடன் வழங்கவேண்டும் என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தங்கம் இறக்குமதி அதிகரிப்பால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்கும் வகையில், மத்திய அரசும், ரிசசர்வ் வங்கியும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இரு தினங்களு க்கு முன், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி,6 சதவீதத்தில் இருந்து,8 சதவீதமாக உயர்த்தப்பட்டது.நேற்று முன் தினம், வாடிக்கையாளர்களை தங்கம் வாங்க ஊக்குவிக்க வேண்டாம் என்று,வங்கிகளை நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.இந்நிலையில்,நேற்று, கூட்டுறவு வங்கிகள், தங்க நாணயங்களுக்கு கடன் வழங் குவதற்கு, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|