பதிவு செய்த நாள்
08 ஜூன்2013
00:11
சென்னை:நேற்று, தங்கம் விலை சவரனுக்கு, 216 ரூபாய் உயர்ந்து, 21,040 ரூபாய்க்கு விற்பனையானது. இதை யடுத்து, தங்கம் விலை மீண்டும், 21 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.சென்ற ஏப்ரல் மாதத்தில், சர்வதேச முதலீட் டாளர்கள், பங்குச் சந்தை மற்றும் அமெரிக்க டாலரில் முதலீடு செய்ததை அடுத்து, அம்மாதத்தில் தங்கம் விலை மிகவும் சரிவடைந்தது.
இறக்குமதி வரிபின், சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்க நிலையே காணப்பட்டு வருகிறது.மத்திய அரசு, சில நாட்களுக்கு முன், தங்கம் மீதான இறக்குமதி வரியை, 2 சதவீதம் உயர்த்தியது. இதையடுத்து, 6 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி, 8 சதவீதமாகஅதிகரிக்கப்பட்டது.அமெரிக்க டாலருக்கு எதி ரான ரூபாயின் வெளிமதிப்பும் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால், தங்கம் விலை, சில நாட்களாக உயர்ந்து வருகிறது.சென்னையில்,நேற்று முன்தினம், 22 காரட்ஆபரண தங்கம், ஒரு கிராம் 2,603 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,824 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 27,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 27 ரூபாய் உயர்ந்து, 2,630 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 216 ரூபாய் அதிகரித்து, 21,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 285 ரூபாய் உயர்ந்து, 28,125 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 48.10 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 44,955 ரூபாய்க் கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு செப்., 8ம் தேதி, முதல் முறையாக, ஒரு கிராம் தங்கத்தின் விலை, 3,022 ரூபாய்க்கும், சவரன், 24,176 ரூபாய்க்கும் விற்பனையானது. தங்கத்தின் விலை மிகவும் அதிகபட்சமாக,ஒரு கிராம், 3,068 ரூபாய்க்கும், ஒரு சவரன், 24,544 ரூபாய்க்கும் விற்பனையாகி உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தை:இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது. இதுதவிர, தங்கம் இறக்குமதிக் கான வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. எனவே, தங்கம் விலை, மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|