நாட்டின் உருக்கு பயன்பாடு1.17 கோடி டன்னாக குறைவுநாட்டின் உருக்கு பயன்பாடு1.17 கோடி டன்னாக குறைவு ... சம்பளம் கொடுக்க என்னிடம் பணம் இல்லை': விஜய் மல்லைய்யா கைவிரிப்பு சம்பளம் கொடுக்க என்னிடம் பணம் இல்லை': விஜய் மல்லைய்யா கைவிரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்திய வரலாற்றில் புதிய சாதனை அளவு:பங்கு வெளியீடு மூலம் ரூ.6,554 கோடி திரட்டல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2013
00:17

மும்பை:கடந்த மே மாதத்தில், இந்திய நிறுவனங்கள், பங்குவெளியீடுகள் மூலம் திரட்டிய தொகை, 6,554 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில், இந்த அளவிற்கு, தொகைதிரட்டப்பட்டுள்ளது என்பது, புதிய சாதனை அளவாக கருதப்படுகிறது.கடந்த 2012ம் ஆண்டு, மே மாதத்தில், பங்கு வெளியீடுகள் மூலம் திரட்டப்பட்ட தொகையை விட, இது, 1,475 சதவீதம்அதிகம் என, பிரைம் டேட்டா பேஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ள புள்ளிவிவரத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக்கம்:கடந்த 1989ம் ஆண்டு, மே மாதத்தில், பங்கு வெளியீடு மூலம் திரட்டப்பட்ட தொகையை விட, சென்ற மே மாதத்தில், திரட்டப்பட்ட தொகை அதிகம் என, தெரியவந்துள்ளது.நிறுவனங்கள், அவற்றின் நிதி ஆதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும், விரிவாக்கம்மற்றும் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தேவையான பகுதி நிதியை திரட்டி கொள்ள பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையில் இருந்து நிதியை திரட்டிக்கொள்கின்றன.
நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள், இரண்டாவது பங்கு வெளியீடு, கோரிக்கை அடிப்படையிலான பங்கு வெளியீடு, உரிமைப் பங்குவெளியீடு, தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு போன்ற வற்றின் வாயிலாக நிதியை திரட்டி கொள்கின்றன.
பங்கு சந்தை:பங்கு சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், கடந்த 2012ம் ஆண்டு மே மாதத்தில், பங்கு வெளியீடு மூலம் நிறுவனங்கள் திரட்டிய தொகை, 416.39 கோடி ரூபாயாக இருந்தது. அதேசமயம், கடந்த 2011ம் ஆண்டு மே மாதத்தில், நிறுவனங்கள் பங்கு வெளியீடு வாயிலாக திரட்டிய தொகை, 4,781 கோடி ரூபாயாக இருந்தது.
இதே போன்று, 2009ம் ஆண்டு, மே மாதத்தில், திரட்டப் பட்ட தொகை, 3,165 கோடி ரூபாயாக அதிகரித்திருந்த நிலையில், 2010ம் ஆண்டு மே மாதத்தில், இத்தொகை, 497 கோடி ரூபாயாக சரிவடைந்திருந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல நிறுவனங்கள், கோரிக்கை அடிப்படையிலான பங்கு வெளியீடு மற்றும் தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு வாயிலாக, நிதி திரட்டுவதில், அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.காரணம்சென்ற மே மாதத்தில்,நிறுவனங்கள், பங்கு வெளியீடுகள் வாயிலாக, அதிக அளவில், நிதி திரட்டி கொண்டுள்ளதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' யின் புதிய விதிமுறைதான் காரணம் என, கூறப்படுகிறது.
அதாவது,பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டுள்ள நிறுவனத்தில்,பொது மக்களின் குறைந்தபட்ச பங்கு மூலதனம், 25 சதவீத அளவிற்கு இருக்க வேண்டும் என, "செபி' புதிய விதிமுறையை அறிவித்தது. இதற்கான காலக் கெடு, நடப்பு ஜூன் மாதம் 3ம் தேதியுடன் நிறைவடைந்தது.இதன் காரணமாகவே, பல நிறுவனங்கள் அவற்றின் பங்கு மூலதனத்தை குறைத்து கொள்ளும் வகையில், பங்கு வெளியீட்டை மேற்கொண்டதாக கூறப் படு கிறது.
கடந்த மே மாதத்தில், 30 நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொண்டதாகவும், அவற்றுள், 21 நிறுவனங்கள், கடைசி ஐந்து வர்த்தக தினங்களில்,பங்குச் சந்தைகளில், கோரிக்கை அடிப்படையிலான பங்கு வெளியீட்டை மேற் கொண்டுள் ளதாகவும் தெரிய வந்துள்ளது.சென்ற மே மாதத்தில்,பங்கு வெளியீட்டை மேற்கொண்ட நிறுவனங்களுள், ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த,டீ.எல்.எப்.,நிறுவனம், தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, பங்கு ஒதுக்கீடு வாயிலாக, 1,800 கோடி ரூபாயை திரட்டி கொண்டு உள்ளது.
விண்ணப்பங்கள்:அதே போன்று, போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம், 320 கோடி ரூபாயை திரட்டி கொண்டு உள் ளது. நடப்பு 2013ம் ஆண்டில், இது வரை பங்கு வெளியீட்டை மேற் கொண்டதில், ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகள் வேண்டி, 12 மடங்கிற்கும் அதிக மாக விண்ணப்பங்கள் வந்தன. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 900 கோடி ரூபாயை திரட்டி கொண்டு உள்ளது.கடந்த மே மாதத்தில்,வெளிவந்த பங்கு வெளியீடுகளில், அன்னிய நிதி நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு மேற்கொண்டு உள்ளதாக, புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நிலவரம் நன்கு இருக்கும் நிலையில், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் மூலதனச்சந்தையில் மேற்கொள்ளும் முதலீடு சிறப்பான அளவில் அதிகரிக்கும் என, பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)