துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 2.74 சதவீதம் சரிவு:ஏப்ரல் - மே இரு மாத காலத்தில்..துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 2.74 சதவீதம் சரிவு:ஏப்ரல் - மே இரு மாத காலத்தில்.. ... அன்னிய செலாவணி கையிருப்பு:28,789 கோடி டாலராக வீழ்ச்சி அன்னிய செலாவணி கையிருப்பு:28,789 கோடி டாலராக வீழ்ச்சி ...
நாட்டின் நிகர நேரடி வரி வசூல்:ரூ.37,596 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2013
00:34

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாத காலத்தில், நாட்டின் நிகர நேரடி வரி வசூல், 37,596 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 35,322 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, நாட்டின் நிகர நேரடி வரி வசூல், 6.44 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இதே காலத்தில், மொத்த நேரடி வரி வசூல், 21.10 சதவீதம் அதிகரித்து, 52,231 கோடி ரூபாயிலிருந்து, 63,252 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நாட்டின் நேரடி வரி வசூலில், நிறுவனங்கள் செலுத்தும் வரி, தனிநபர் வருமான வரி, பங்குபரிவர்த்தனை வரி, செல்வ வரி உள்ளிட்டவை அடங்கும்.
மதிப்பீட்டு காலத்தில், நிறுவனங்கள் செலுத்திய வரி, ஒட்டு மொத்த அளவில், 14.91 சதவீதம் வளர்ச்சி கண்டு, 24,329 கோடி ரூபாயிலிருந்து, 27,957 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.இதே போன்று, மொத்த தனிநபர் வருமான வரி வசூல், 34,805 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட வரி வசூலை (27,343 கோடி ரூபாய்) விட, 27.29 சதவீதம் அதிகமாகும்.
கணக்கீட்டு காலத்தில், பங்குச் சந்தை நிலவரம் நன்கு இல்லாத காரணத்தால், பங்கு பரிவர்த்தனை வரி வசூல், 14.63 சதவீதம் சரிவடைந்து, 540 கோடி ரூபாயிலிருந்து, 461 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.அதேசமயம், செல்வ வரி வசூல், மிக அதிகளவாக, 85.67 சதவீதம் வளர்ச்சி கண்டு, 15 கோடியிலிருந்து, 28 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)