பதிவு செய்த நாள்
11 ஜூன்2013
00:34

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான திங்கள் கிழமையன்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேச நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் வெளி மதிப்பு, வரலாற்றில் இல்லாத நிகழ்வாக, 58 ரூபாயாக சரிவடைந்தது போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. வர்த்தகத்தின் முடிவில், "சென்செக்ஸ்' 0.06 சதவீத உயர்வுடனும், "நிப்டி', 0.05 சதவீத சரிவுடனும் முடிவடைந்தன.சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சி, கடந்த
10 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவடைந்துள்ளது என்ற செய்தியால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. அதேசமயம், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வியாபாரம் நன்கு இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், எண்ணெய், எரிவாயு, நுகர் பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது. அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள், வங்கி, ரியல் எஸ்டேட் மற்றும் மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 11.84 புள்ளிகள் உயர்ந்து, 19,441.07 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,585.75 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,366.82 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், விப்ரோ, இன்போசிஸ் உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும். ஜிந்தால் ஸ்டீல், பி.எச்.இ.எல்., உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 3 புள்ளிகள் சரிவடைந்து, 5,878 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,931.65 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,857.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|