3 ஆண்டுகளில் 300 கோடி டாலர் முதலீடு செய்யும் ‌கெய்ரன்3 ஆண்டுகளில் 300 கோடி டாலர் முதலீடு செய்யும் ‌கெய்ரன் ... உள்நாட்டு விமான கட்டணம்15 சதவீதம் குறைப்பு உள்நாட்டு விமான கட்டணம்15 சதவீதம் குறைப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்தியாவின் வெளிநாட்டு கடன்39,000கோடி டாலராக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2013
00:19

புதுடில்லி:சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் வெளிநாட்டு கடன், 13 சதவீதம் அதிகரித்து, 39 ஆயிரம்கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 34,550கோடி டாலராக இருந்தது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு நிதியாண்டில், ஒட்டு மொத்த வெளிநாட்டு கடனில், அயல்நாட்டு வர்த்தக கடன் பங்களிப்பு, 31 சதவீதம் (12,090கோடி டாலர்) என்ற அளவில் உள்ளது.இதையடுத்து, குறுகிய கால கடன், 14.8 சதவீத பங்களிப்பையும், வெளிநாடு வாழ் இந்தியர்களின் டெபாசிட், 18.2 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளன.கடந்த நிதியாண்டில், வெளிநாடு வாழ் இந்தியர்கள்மேற்கொண்ட டெபாசிட், 1,220கோடி டாலரிலிருந்து, 7,080கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடனில், டாலர் அடிப்படையிலான கடன், 57.2 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ரூபாய் (24 சதவீதம்), எஸ்.டீ.ஆர் (7.5 சதவீதம்) மற்றும் யூரோ (3.5 சதவீதம்) ஆகியவற்றின் அடிப்படையிலான கடன், அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.சென்ற நிதியாண்டில், இந்தியாவின் வெளிநாட்டு கடனில், அன்னியச் செலாவணி கையிருப்பு விகிதம், 74.9 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது (85.2 சதவீதம்) குறைவான அளவாகும்.
குறுகிய கால வர்த்தக கடன் மற்றும் வெளிநாட்டு வர்த்தக கடன் அதிகளவில் திரட்டியதன் காரணமாகவே, வெளிநாட்டு கடன் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்து உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)