பதிவு செய்த நாள்
28 ஜூன்2013
00:19
புதுடில்லி:சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் வெளிநாட்டு கடன், 13 சதவீதம் அதிகரித்து, 39 ஆயிரம்கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 34,550கோடி டாலராக இருந்தது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு நிதியாண்டில், ஒட்டு மொத்த வெளிநாட்டு கடனில், அயல்நாட்டு வர்த்தக கடன் பங்களிப்பு, 31 சதவீதம் (12,090கோடி டாலர்) என்ற அளவில் உள்ளது.இதையடுத்து, குறுகிய கால கடன், 14.8 சதவீத பங்களிப்பையும், வெளிநாடு வாழ் இந்தியர்களின் டெபாசிட், 18.2 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளன.கடந்த நிதியாண்டில், வெளிநாடு வாழ் இந்தியர்கள்மேற்கொண்ட டெபாசிட், 1,220கோடி டாலரிலிருந்து, 7,080கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடனில், டாலர் அடிப்படையிலான கடன், 57.2 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ரூபாய் (24 சதவீதம்), எஸ்.டீ.ஆர் (7.5 சதவீதம்) மற்றும் யூரோ (3.5 சதவீதம்) ஆகியவற்றின் அடிப்படையிலான கடன், அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.சென்ற நிதியாண்டில், இந்தியாவின் வெளிநாட்டு கடனில், அன்னியச் செலாவணி கையிருப்பு விகிதம், 74.9 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது (85.2 சதவீதம்) குறைவான அளவாகும்.
குறுகிய கால வர்த்தக கடன் மற்றும் வெளிநாட்டு வர்த்தக கடன் அதிகளவில் திரட்டியதன் காரணமாகவே, வெளிநாட்டு கடன் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்து உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|