பதிவு செய்த நாள்
28 ஜூன்2013
00:20
மும்பை:இந்திய விமான நிறுவனங்கள்,போட்டிபோட்டுக் கொண்டு, 15 சதவீதம் வரை விமான கட்டணத்தை குறைத்துள்ளன. பொதுவாக, ஜூன் முதல் செப்டம்பர் வரை, விமானபோக்குவரத்து மந்தமாக இருக்கும் என்பதால், விமானச்சேவை நிறுவனங்கள், கட்டணத்தை குறைத்து, வருவாயை பெருக்கத் திட்டமிட்டு உள்ளன.
இதன்படி இண்டிகோ,கோஏர் நிறுவனங்கள், டில்லி - மும்பை இடையிலான விமான பயணக் கட்டணத்தை, 9,300 ரூபாயில் இருந்து, 7,900 ரூபாயாக குறைத்து உள்ளன.அதே சமயம், ஐந்து நாட்களுக்கு முன்னதாக பதிவு செய்வோருக்கே இச்சலுகை கிடைக்கும். ஒரு வாரத்திற்கு முன்பாக பதிவு செய்வோருக்கான கட்டணம், 7,700ல் இருந்து, 6,000 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட மார்க்கத்தில், விமான பயணிகளுக்கு உணவு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை வழங்கும் ஏர்-இந்தியா, 9,218 ரூபாய் கட்டணம் வ‹லிக்கிறது. இதே நகரங்களுக்கு, சில விமானங்களில் உணவு வசதிகளை வழங்கும் ஜெட் ஏர்வேஸ், பயணக் கட்டணத்தை, 8,742 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது.இண்டிகோ,கோர்ஏர் நிறுவனங்கள், டில்லி - சென்னை இடையிலான விமான கட்டணத்தை, 9,800லிருந்து, 9,049 ரூபாயாக குறைத்துள்ளன. அதே சமயம், டில்லி - பெங்களூரு இடையிலான கட்டணம், 10 ஆயிரம் ரூபாய் என்ற அளவிலேயே உள்ளது.
கடந்த, 2009ம் ஆண்டுடன் ஒப்பிட்டால், தற்போதைய சலுகை கட்டணம் அதிகம் என, சில விமான பயணிகள் தெரிவித்தனர். முன்பு, டில்லி - மும்பை இடையிலான விமான பயணத்திற்கு, ஒரு மாதத்திற்கு முன்பு, பதிவு செய்வோருக்கான சராசரி கட்டணம், 2,400 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 4,921 ரூபாயாக உயர்ந்துள்ளது என, அவர்கள்மேலும் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|