பதிவு செய்த நாள்
28 ஜூன்2013
00:27
புதுடில்லி:இந்திய இறால் மீதான இறக்குமதி எதிர் தீர்வையை, அமெரிக்க அரசு, வரும் செப்டம்பர் மாதம் நீக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அரசு அளிக்கும் மானியம் காரணமாக, குறைந்த விலையில் இறக்குமதியாகும் இந்திய இறால்களால், தாங்கள் பாதிக்கப்படுவதாக, அமெரிக்க இறால் வர்த்தகர்கள் புகார் தெரிவித்துஇருந்தனர்.
பாதிப்பு:இதை அடுத்து, இந்திய இறால்களுக்கு, அமெரிக்கா, கடந்தமே 29ம்தேதி, 5.91 சதவீத இறக்குமதி எதிர் தீர்வை விதித்தது. இதனால், இந்திய இறால் ஏற்றுமதியாளர்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக, அமெரிக்க வர்த்தக அமைச்சகத்தின் அதிகாரிகள் குழு, அண்மையில் டில்லி வந்து, மத்திய வர்த்தக அமைச்சக அதிகாரிகளை சந்தித்துபேச்சுவார்த்தை நடத்தியது.
விவசாயிகள்:அப்போது, சிறிய அளவில் இறால் பண்ணை அமைத்து உள்ள விவசாயிகளுக்குத் தான், மத்திய அரசு மானியம் வழங்குவதாக, இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த மானியம் கூட, சிறு விவசாயிகளிடையே இறால் வளர்ப்பை ஊக்குவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தைமேம்படுத்த வழங்கப்படுகிறது; கடும்போட்டியை கொண்ட சர்வதேச சந்தையில், வலுவாக காலூன்றுவதற்காக அல்ல என, அமெரிக்க அதிகாரிகளிடம் எடுத்துக் கூறப்பட்டது.
ஆலோசனை:அவற்றை கவனமுடன்கேட்டுக்கொண்ட அதிகாரிகள், அமெரிக்க அரசுடன் ஆலோசித்து, வரும் செப்டம்பரில், இறால் மீதான இறக்குமதி எதிர் தீர்வை தொடர்பான இறுதி முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்."இது இந்தியாவிற்கு சாதகமான முடிவாக இருக்கும். அமெரிக்க, இந்திய இறால் இறக்குமதிக்கான எதிர் தீர்வையை குறைக்கவோ அல்லது நீக்கவோ வாய்ப்பு உள்ளது' என, இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பைசேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|