தேக்க நிலையில் இந்திய சிமென்ட் துறை கட்டமைப்பு பணிகள் ஊக்குவிக்கப்படவேண்டும் - என்.ஸ்ரீனிவாசன்தேக்க நிலையில் இந்திய சிமென்ட் துறை கட்டமைப்பு பணிகள் ... ... 30 ஆண்டுகளுக்கு பின் தங்கம் விலை தொடர் சரிவு 30 ஆண்டுகளுக்கு பின் தங்கம் விலை தொடர் சரிவு ...
இந்திய இறால் மீதான தீர்வையை அமெரிக்கா நீக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2013
00:27

புதுடில்லி:இந்திய இறால் மீதான இறக்குமதி எதிர் தீர்வையை, அமெரிக்க அரசு, வரும் செப்டம்பர் மாதம் நீக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அரசு அளிக்கும் மானியம் காரணமாக, குறைந்த விலையில் இறக்குமதியாகும் இந்திய இறால்களால், தாங்கள் பாதிக்கப்படுவதாக, அமெரிக்க இறால் வர்த்தகர்கள் புகார் தெரிவித்துஇருந்தனர்.
பாதிப்பு:இதை அடுத்து, இந்திய இறால்களுக்கு, அமெரிக்கா, கடந்தமே 29ம்தேதி, 5.91 சதவீத இறக்குமதி எதிர் தீர்வை விதித்தது. இதனால், இந்திய இறால் ஏற்றுமதியாளர்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக, அமெரிக்க வர்த்தக அமைச்சகத்தின் அதிகாரிகள் குழு, அண்மையில் டில்லி வந்து, மத்திய வர்த்தக அமைச்சக அதிகாரிகளை சந்தித்துபேச்சுவார்த்தை நடத்தியது.
விவசாயிகள்:அப்போது, சிறிய அளவில் இறால் பண்ணை அமைத்து உள்ள விவசாயிகளுக்குத் தான், மத்திய அரசு மானியம் வழங்குவதாக, இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த மானியம் கூட, சிறு விவசாயிகளிடையே இறால் வளர்ப்பை ஊக்குவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தைமேம்படுத்த வழங்கப்படுகிறது; கடும்போட்டியை கொண்ட சர்வதேச சந்தையில், வலுவாக காலூன்றுவதற்காக அல்ல என, அமெரிக்க அதிகாரிகளிடம் எடுத்துக் கூறப்பட்டது.
ஆலோசனை:அவற்றை கவனமுடன்கேட்டுக்கொண்ட அதிகாரிகள், அமெரிக்க அரசுடன் ஆலோசித்து, வரும் செப்டம்பரில், இறால் மீதான இறக்குமதி எதிர் தீர்வை தொடர்பான இறுதி முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்."இது இந்தியாவிற்கு சாதகமான முடிவாக இருக்கும். அமெரிக்க, இந்திய இறால் இறக்குமதிக்கான எதிர் தீர்வையை குறைக்கவோ அல்லது நீக்கவோ வாய்ப்பு உள்ளது' என, இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பைசேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)