பதிவு செய்த நாள்
28 ஜூன்2013
00:30
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று மிகவும் நன்கு இருந்தது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததைஅடுத்து, முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடுமேற்கொண்டனர். இதையடுத்து, "சென்செக்ஸ்' 1.75 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தது.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, 1.8 சதவீதமாகக் குறைந்து உள்ளது. இதையடுத்து, அந்நாட்டின் மத்திய வங்கி, கடன் பத்திரங்களை வாங்கும் திட்டத்தை நிறுத்தி வைப்பது தொடர்பாக, எச்சரிக்கையுடன் செயல்படும் என்ற நிலைப்பாட்டால், இதர ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்றைய வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், மருந்து ஆகிய துறைகளைச்சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, அதிகதேவை காணப்பட்டது.அதேசமயம், பொறியியல் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் துறைகளைச்சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 323.83 புள்ளிகள் அதிகரித்து, 18,875.95 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,925.75 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,688.28 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஓ.என்.ஜி.சி., டி.சி.எஸ்., சன்பார்மா உள்ளிட்ட, 20 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், மாருதி, டாடாமோட்டார்ஸ்,கோல் இந்தியா உள்ளிட்ட, 10 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 93.65 புள்ளிகள் உயர்ந்து, 5,682.35 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,699.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,630.95 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|