பதிவு செய்த நாள்
01 ஜூலை2013
00:54
மும்பை:உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், எரிவாயுவின் விலையை உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசிற்கு, யூரியாவிற்கான மானியச் செலவினம், கூடுதலாக, 2,500 கோடி ரூபாய்அதிகரிக்கும் என, ஆய்வு நிறுவனமான கிரிசில் தெரிவித்து உள்ளது.அனுமதி:அண்மையில், பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜனின் பரிந்துரைக்கு ஏற்ப, மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, இயற்கை எரிவாயுவின் விலையை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, 10 லட்சம் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட், இயற்கை எரிவாயுவின் விலை, 4.20 டாலரிலிருந்து, 8.40 டாலராக உயர உள்ளது. இந்த விலை உயர்வு, வரும் 2014ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த விலை உயர்வால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் யூரியாவின் விலை அதிகரிக்கும். இதையடுத்து, இயற்கை எரிவாயுவின் விலை, ஒரு டாலர் உயரும் நிலையில், அது, யூரியாவிற்கான மானியச் செலவினத்தை, 2,000 - 2,500 கோடி ரூபாய்வரை அதிகரித்து விடும் என, கிரிசில் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
தற்போது ஒரு டன் யூரியாவின் விலை, 5,360 ரூபாயாக உள்ளது. இதன் அடிப்படையில், எரிவாயுவின் விலை அதிகரிக்கும் நிலையில், இதற்கான அரசின் மானியச் சுமை, 2014-15ம் நிதியாண்டில், 9,000 கோடி ரூபாய்அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.உள்நாட்டில், இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள், அரசுக்கு அளிக்கும் ராயல்டி தொகையை, கழித்தது போக, நிகர அளவில், யூரியாவிற்காக அரசின் நிகர மானியச் சுமை, 2,000 - 2,500 கோடி ரூபாயாக இருக்கும் என, கிரிசில் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை எரிவாயுவின் விலை உயர்வு அமலுக்கு வரும் நிலையில், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம், 13 ஆயிரம் கோடி ரூபாயும், ஆயில் இந்தியா நிறுவனத்தின் லாபம், 1,500 கோடி ரூபாயும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இயற்கை எரிவாயு விலை உயர்வால், தனியார் துறையைச் சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு, வரும் 2015-16ம் நிதியாண்டிலிருந்து, வருவாய்பன்மடங்கு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
வட்டி செலவினம்:அதேசமயம், காலம் தாழ்த்தி வழங்கப்படும் மானியத் தொகையால், உள்நாட்டில், யூரியா தயாரிக்கும் நிறுவனங்களின் நடைமுறை மூலதனச் செலவும், வட்டி செலவினமும் அதிகரிக்கும்.இதனால், இந்நிறுவனங்களின் நிகர லாப வரம்பு, குறையும் என்றும் கிரிசில் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|