பொருளாதார மண்டலங்களின்ஏற்றுமதி 31 சதவீதம் அதிகரிப்புபொருளாதார மண்டலங்களின்ஏற்றுமதி 31 சதவீதம் அதிகரிப்பு ... வெளிநாடு வாழ் இந்தியர்கள்அனுப்பிய தொகை 15 சதவீதம் உயர்வு வெளிநாடு வாழ் இந்தியர்கள்அனுப்பிய தொகை 15 சதவீதம் உயர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
இயற்கை எரிவாயு விலை உயர்வால்...யூரியாவிற்கான மானிய செலவினம் அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2013
00:54

மும்பை:உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், எரிவாயுவின் விலையை உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசிற்கு, யூரியாவிற்கான மானியச் செலவினம், கூடுதலாக, 2,500 கோடி ரூபாய்அதிகரிக்கும் என, ஆய்வு நிறுவனமான கிரிசில் தெரிவித்து உள்ளது.அனுமதி:அண்மையில், பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜனின் பரிந்துரைக்கு ஏற்ப, மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, இயற்கை எரிவாயுவின் விலையை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, 10 லட்சம் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட், இயற்கை எரிவாயுவின் விலை, 4.20 டாலரிலிருந்து, 8.40 டாலராக உயர உள்ளது. இந்த விலை உயர்வு, வரும் 2014ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த விலை உயர்வால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் யூரியாவின் விலை அதிகரிக்கும். இதையடுத்து, இயற்கை எரிவாயுவின் விலை, ஒரு டாலர் உயரும் நிலையில், அது, யூரியாவிற்கான மானியச் செலவினத்தை, 2,000 - 2,500 கோடி ரூபாய்வரை அதிகரித்து விடும் என, கிரிசில் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
தற்போது ஒரு டன் யூரியாவின் விலை, 5,360 ரூபாயாக உள்ளது. இதன் அடிப்படையில், எரிவாயுவின் விலை அதிகரிக்கும் நிலையில், இதற்கான அரசின் மானியச் சுமை, 2014-15ம் நிதியாண்டில், 9,000 கோடி ரூபாய்அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.உள்நாட்டில், இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள், அரசுக்கு அளிக்கும் ராயல்டி தொகையை, கழித்தது போக, நிகர அளவில், யூரியாவிற்காக அரசின் நிகர மானியச் சுமை, 2,000 - 2,500 கோடி ரூபாயாக இருக்கும் என, கிரிசில் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை எரிவாயுவின் விலை உயர்வு அமலுக்கு வரும் நிலையில், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம், 13 ஆயிரம் கோடி ரூபாயும், ஆயில் இந்தியா நிறுவனத்தின் லாபம், 1,500 கோடி ரூபாயும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இயற்கை எரிவாயு விலை உயர்வால், தனியார் துறையைச் சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு, வரும் 2015-16ம் நிதியாண்டிலிருந்து, வருவாய்பன்மடங்கு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
வட்டி செலவினம்:அதேசமயம், காலம் தாழ்த்தி வழங்கப்படும் மானியத் தொகையால், உள்நாட்டில், யூரியா தயாரிக்கும் நிறுவனங்களின் நடைமுறை மூலதனச் செலவும், வட்டி செலவினமும் அதிகரிக்கும்.இதனால், இந்நிறுவனங்களின் நிகர லாப வரம்பு, குறையும் என்றும் கிரிசில் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)