பதிவு செய்த நாள்
04 ஜூலை2013
00:16
சென்னை:பொதுத் துறையைச் சேர்ந்த, லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்.ஐ.சி.,) மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை இடையே, வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, எல்.ஐ.சி., நிறுவனத்தின் பல்வேறு வகையான ஆயுள் காப்பீட்டு பாலிசி வசதிகளை, சிண்டிகேட் வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு சீரிய முறையில் ஏற்படுத்தி தர உள்ளது.
மும்பையில் உள்ள எல்.ஐ.சி.,யின் தலைமை அலுவலகத்தில், இதற்கான ஒப்பந்தம், மேற்கொள்ளப்பட்டது. இதில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் தற்போதைய தலைவர் (பொறுப்பு) தாமஸ் மேத்யூ.டி மற்றும் சிண்டிகேட் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.ஜி.சங்வி ஆகியோர் கையொப்பமிட்டனர்.
இதற்கான நிகழ்ச்சியில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.கே.ராய், செயல் இயக்குனர், எம்.ஆஞ்ச நேய பிரசாத் மற்றும் சிண்டிகேட் வங்கியின், செயல் இயக்குனர், பொது மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|