பதிவு செய்த நாள்
06 ஜூலை2013
00:14
மும்பை:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்திய நிறுவனங்களின் வருவாய் (வங்கி மற்றும் எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள் தவிர), 5-6 சதவீதம் வளர்ச்சி காணும் என, கிரிசில் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாப வரம்பு:அதேசமயம், இக்காலாண்டில், நிறுவனங்களின் செயல்பாட்டு லாப வரம்பு, 18.5 சதவீதம் என்ற அளவில் நிலையாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஐந்து காலாண்டுகளாக, நிறுவனங்களின் லாப வரம்பு குறைந்து வந்தது.
முன்னேற்றம்:இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இது ஓரளவிற்கு முன்னேற்றம் காணும் என, கிரிசில் தெரிவித்து உள்ளது.கணக்கீட்டு காலாண்டில், உருக்கு, நிலக்கரி, உரம், கப்பல், விமானம்,ஹோட்டல் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட, 28 துறைகளின் வருவாய் வளர்ச்சி, 5-6 சதவீதம் அளவிற்கு உயரும் என, மதிப்பிடப்பட்டுள் ளது.நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் பல மாநிலங்களில், பருவமழை நல்ல அளவில் பெய்து வருகிறது. மேலும், பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாக, மத்திய அரசின் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவினம் உயரும் என, தெரிகிறது.இதையடுத்து, ஒட்டு மொத்த அளவில், நடப்பு 2013-14ம் நிதியாண்டில், மேற்கண்ட துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் ஆண்டு வருவாய் வளர்ச்சி, 10-11 சதவீதம் என்ற அளவில் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாய் மதிப்பு:கடந்த 2011-12ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில், நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி, 18 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, கடந்த 2012-13ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில், 4.4 சதவீதமாக மிகவும் சரிவடைந்து போனது என்பது குறிப்பிடத்தக்கது.டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், ஏற்றுமதி நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி உயரும் என்ற மதிப்பீடும் உள்ளது.
பொருளாதார வளர்ச்சி :இந்நிலையில், நடப்பு நிதிஆண்டில், நாட்டின்பொருளாதார வளர்ச்சி மேம்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நடப்பு நிதியாண்டில், நிறுவனங்களின் செயல்பாட்டு லாப வரம்பு, 18-18.5 சதவீதம் என்ற அளவில் நிலையாக இருக்கும் என, கிரிசில் நிறுவனத்தின் மதிப்பீட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|