நிறுவனங்களின் வருவாய் 6 சதவீதம் அதிகரிக்கும்நிறுவனங்களின் வருவாய் 6 சதவீதம் அதிகரிக்கும் ... நிலக்கடலை உற்பத்தி 5 லட்சம் டன்னாக உயரும் நிலக்கடலை உற்பத்தி 5 லட்சம் டன்னாக உயரும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
புண்ணாக்கு ஏற்றுமதி 21 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2013
00:23

கோல்கட்டா:நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, நடப்பு 2013ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில், 8.51 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 10.74 லட்சம் டன் னாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு காலத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி, 21 சதவீதம் சரிவடைந்துள்ளது.
சோயா புண்ணாக்கு :அதேசமயம், சென்ற ஜூன் மாதத்தில் மட்டும், புண்ணாக்கு ஏற்றுமதி, 12 சதவீதம் அதிகரித்து, 3.11 லட்சம் டன்னிலிருந்து, 3.49 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.ஏப்ரல்-ஜூன் வரையிலான காலத்தில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 6.38 லட்சம் டன்னிலிருந்து, 4.10 லட்சம் டன்னாக மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதே சமயம், கடுகு மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
நம் நாட்டிலிருந்து, தென்கொரியா மற்றும் ஈரான் நாடுகள் அதிகளவில் புண்ணாக்கை இறக்குமதி செய்து கொள் கின்றன. குறிப்பாக, தென் கொரியாவிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில், 2.83 லட்சம் டன்னிலிருந்து, 3.05லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.இதில்,கடுகு மற்றும் ஆமணக்கு புண் ணாக்கு ஏற்றுமதி முறையே, 1.26 லட்சம் டன் மற்றும் 1.79 லட்சம் டன்னாக உள்ளது.இது தவிர, ஐரோப்பா மற்றும் இதர நாடுகளுக்கான இதன் ஏற்றுமதி, 29,704 டன்னிலிருந்து, 1.09 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.
தாய்லாந்து:அதேசமயம், ஈரான் நாட்டிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 3.01 லட்சம் டன் னிலிருந்து, 2.61 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இதே போன்று, தாய்லாந்து நாட்டிற்கான புண்ணாக்கு ஏற்றுமதியும், 84,159 டன்னிலிருந்து, 55,810 டன்னாகவும், வியட்நாமிற்கான இதன் ஏற்றுமதி, 1.20 லட்சம் டன்னிலிருந்து, 31,421 டன்னாகவும் சரிவு அடைந்துள்ளது.
மேலும்,இந்தோனேஷியா நட்டிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 67,895 டன்னிலிருந்து, 24,788 டன்னாக குறைந் துள்ளது. ஒட்டு மொத்த அளவில், பல்வேறு நாடுகளுக்கான புண்ணாக்கு ஏற்றுமதி, மதிப்பீட்டு காலத்தில் சரிவடைந்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)