பதிவு செய்த நாள்
06 ஜூலை2013
00:23
கோல்கட்டா:நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, நடப்பு 2013ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில், 8.51 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 10.74 லட்சம் டன் னாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு காலத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி, 21 சதவீதம் சரிவடைந்துள்ளது.
சோயா புண்ணாக்கு :அதேசமயம், சென்ற ஜூன் மாதத்தில் மட்டும், புண்ணாக்கு ஏற்றுமதி, 12 சதவீதம் அதிகரித்து, 3.11 லட்சம் டன்னிலிருந்து, 3.49 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.ஏப்ரல்-ஜூன் வரையிலான காலத்தில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 6.38 லட்சம் டன்னிலிருந்து, 4.10 லட்சம் டன்னாக மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதே சமயம், கடுகு மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
நம் நாட்டிலிருந்து, தென்கொரியா மற்றும் ஈரான் நாடுகள் அதிகளவில் புண்ணாக்கை இறக்குமதி செய்து கொள் கின்றன. குறிப்பாக, தென் கொரியாவிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில், 2.83 லட்சம் டன்னிலிருந்து, 3.05லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.இதில்,கடுகு மற்றும் ஆமணக்கு புண் ணாக்கு ஏற்றுமதி முறையே, 1.26 லட்சம் டன் மற்றும் 1.79 லட்சம் டன்னாக உள்ளது.இது தவிர, ஐரோப்பா மற்றும் இதர நாடுகளுக்கான இதன் ஏற்றுமதி, 29,704 டன்னிலிருந்து, 1.09 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.
தாய்லாந்து:அதேசமயம், ஈரான் நாட்டிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 3.01 லட்சம் டன் னிலிருந்து, 2.61 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இதே போன்று, தாய்லாந்து நாட்டிற்கான புண்ணாக்கு ஏற்றுமதியும், 84,159 டன்னிலிருந்து, 55,810 டன்னாகவும், வியட்நாமிற்கான இதன் ஏற்றுமதி, 1.20 லட்சம் டன்னிலிருந்து, 31,421 டன்னாகவும் சரிவு அடைந்துள்ளது.
மேலும்,இந்தோனேஷியா நட்டிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 67,895 டன்னிலிருந்து, 24,788 டன்னாக குறைந் துள்ளது. ஒட்டு மொத்த அளவில், பல்வேறு நாடுகளுக்கான புண்ணாக்கு ஏற்றுமதி, மதிப்பீட்டு காலத்தில் சரிவடைந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|