பதிவு செய்த நாள்
07 ஜூலை2013
01:02
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 28ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 320 கோடி டாலர் (18,240 கோடி ரூபாய்)சரிவடைந்து, 28,464 கோடி டாலராக (16.22 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 281 கோடி டாலர் (16,017 கோடி ரூபாய்) வீழ்ச்சி கண்டு, 28,784 கோடி டாலராக (16.41 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது. ஆக, தொடர்ந்து இரண்டு வாரங்களாக, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, வீழ்ச்சி கண்டு வருகிறது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 315 கோடி டாலர் குறைந்து, 25,527 கோடி டாலராக மிகவும்சரிவடைந்துள்ளது. மேலும், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 3.08 கோடி டாலர் குறைந்து, 434 கோடி டாலராகவும்,சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் கையிருப்பு, 1.55 கோடி டாலர்சரிவடைந்து, 218 கோடி டாலராகவும் குறைந்துள்ளது.அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, மாற்றம் ஏதுமின்றி, 2,286 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|