பதிவு செய்த நாள்
08 ஜூலை2013
01:00
வங்கித் துறையில் களமிறங்குவதற்காக, ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்துள்ள பெரும்பாலான நிறுவனப் பங்குகள் விலை சரிவடைந்து வருகிறது.புதிய வங்கி துவங்க, டாட்டா குழுமம் (டாட்டா சன்ஸ்), ஆதித்ய பிர்லா நுவோ, லார்சன் அண்டு டூப்ரோ பைனான்ஸ், ரிலையன்ஸ் கேப்பிட்டல், ஸ்ரீராம் கேப்பிட்டல், பஜாஜ் பின்சர்வ், ஐ.டீ.எப்.சி., முத்தூட் பைனான்ஸ், இந்தியா புல்ஸ், எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் உள்ளிட்ட, 26 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.இவற்றில், 15க்கும் மேற்பட்ட நிறுவனப் பங்குகளின் விலை, கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகின்றன.
வங்கி துவங்கும்பட்சத்தில், இந்நிறுவனங்களின் கடன் சுமை, வட்டிச் செலவினம் ஆகியவை உயர வாய்ப்புள்ளது. இது, இந்நிறுவனங்களின் நிகர லாப வரம்பையும், டிவிடெண்டு அளிப்பையும் பாதிக்கக் கூடும் என்பதால், இவற்றின் பங்குகள் மீதான விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், இப்பங்குகளின் விலை குறைந்துள்ளது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர். சரிவை சந்தித்துள்ள நிறுவனப் பங்குகளின் விலை அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|