பதிவு செய்த நாள்
08 ஜூலை2013
17:40
மும்பை : வாரத்தின் முதல்நாளில் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது இந்திய பங்குசந்தைகள். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் ஒரு வரலாற்று சரிவை சந்தித்துள்ளதால் இந்திய பங்குசந்தைகளிலும் சரிவு காணப்பட்டது. காலையில் வர்த்தகநேர துவக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.61.10 எனும் உச்சநிலை சரிவை சந்தித்தது. இதனால் பங்குசந்தைகள் நாள் முழுக்க சரிவில் இருந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 171.05 புள்ளிகள் சரிந்து 19,324.77 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 56.35 புள்ளிகள் சரிந்து 5,811.55 எனும் அளவிலும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் 21 பங்குகள் விலை சரிவில் முடிந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ., எச்டிஎப்சி, எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் விலை பெரும் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|