பதிவு செய்த நாள்
17 ஜூலை2013
00:20
புதுடில்லி:காய்கறிகளின் விலை, கூடிய விரைவில், படிப்படியாக குறையும் என, மத்தியவேளாண் அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.
நாட்டின் பல மாநிலங்களில், கடுமையான மழைப் பொழிவு இருந்து வருகிறது. இதனால், சரக்கு போக்குவரத்து, மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, குறிப்பிட்ட சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
இந்த விலைஉயர்வு தற்காலிகமானதுதான்.கூடிய விரைவில் இவற்றின்விலை குறையும். மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில், மழைப் பொழிவு அதிகமாக உள்ளது. சந்தை களுக்கு, வெங்காயம் வரத்து, அதிகரிக்கும் நிலையில், அதன் விலை குறையும். இவ்வாறு பவார் கூறினார்.
கடந்த மாதம் புதுடில்லியில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 19 ரூபாயாக இருந்தது. இது தற்போது, 31 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோன்று, உருளைக்கிழங்கின் விலையும், 18 ரூபாயிலிருந்து, 22 ரூபாயாக உயர்ந்துள்ளது.இவைதவிர, கடந்த மாதம், ஒரு கிலோ தக்காளியின் விலை, 18 ரூபாயாக இருந்தது. இது, தற்போது சில்லரை விற்பனையில், 60 ரூபாயாக மிகவும் அதிகரித்துள்ளது.மேலும் ஒரு சில மாநிலங்களில்,ஒரு கிலோ தக்காளியின் விலை, 60-80 ரூபாய் என்ற அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|