பதிவு செய்த நாள்
17 ஜூலை2013
00:37
புதுடில்லி:நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில் (ஆக.,-ஜூலை), ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் 11 மாத காலத்தில், இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி, 91.40 லட்சம் பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ), சரிவடைந்திருக்கும் என, அமெரிக்கவேளாண் அமைச்சகம் (யு.எஸ்.டீ.ஏ.,) தெரிவித்து உள்ளது.
சென்ற 2011-12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி, 1.39கோடி பொதிகளாக அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், நடப்பு பருவத்தில் இதன் ஏற்றுமதி, 36 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது, என, முதல்கட்ட தகவல்களின் அடிப்படையில், யு.எஸ்.டீ.ஏ., மதிப்பீடு செய்துள்ளது.
டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவால், சென்ற ஜூன் மாதத்தில், நூலிழை ஏற்றுமதி சூடுபிடித்திருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதனை உறுதிப்படுத்தும் வகையில், நூலிழை ஏற்றுமதிக்கான பதிவு, சென்ற மே மாதத்தில் மட்டும்,
கடந்தாண்டின் இதேமாதத்தை காட்டிலும், 21 சதவீதம் அதிகரித்துள்ளது என, இத்துறையை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார். சீனா, வங்கதேசம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள், இந்தியாவின் பருத்தி ஏற்றுமதிக்கான முக்கிய சந்தை களாக விளங்குகின்றன. நடப்பு ஆண்டில், உள்நாட்டில் பருத்தி பயன்பாடு, 2.86கோடி பொதிகளாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், நடப்பு 2012-13ம் பருத்தி பருவத்தில் (ஜூலை-ஜூன்), இந்தியாவின் பருத்தி உற்பத்தி, கடந்த பருவத்தை விட சற்று குறைவாக, 3.38கோடி பொதிகளாக இருக்கும் என, யு.எஸ்.டீ.ஏ., மதிப்பிட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|