பதிவு செய்த நாள்
17 ஜூலை2013
23:48
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் புதன்கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. மத்திய அரசு, பாதுகாப்பு, தொலை தொடர்பு, காப்பீடு உள்ளிட்ட பல துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டிற்கான உச்ச வரம்பை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டதன் விளைவாக, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவ டைந்தது.
இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்கு இருந்தது. இருப்பினும், ஐரோப்பிய பங்குச் சந்ததகளில் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், நுகர் பொருட்கள், எண்ணெய், எரிவாயு, நுகர்வோர் சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், வங்கி, உலோகம், மோட்டார் வாகன துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 97.50 புள்ளிகள் அதிகரித்து, 19,948.73 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,983.22 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 19,778.54 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், எச்.யு.எல்., என்.டி.பி.சி., விப்ரோ உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், டாட்டா ஸ்டீல், எச்.டீ.எப்.சி பேங்க், மகிந்திரா உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 18.05 புள்ளிகள் உயர்ந்து, 5,973.30 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,989.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,926.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|