பதிவு செய்த நாள்
21 ஜூலை2013
03:23
கூர்கான்: ஜெர்மனியில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன், 8 இந்தியர்கள், புதிய "பீ.எம்.டபிள்யூ1' கார் ஓட்டும் வாய்ப்பை பெற்றனர்.பீ.எம்.டபிள்யூ இந்தியா நிறுவனம், விரைவில், "பீ.எம்.டபிள்யூ 1' என்ற புதிய காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதை முன்னிட்டு, இந்நிறுவனம், "தி டைனமிக் 1 எக்ஸ்பீரியன்ஸ்' என்ற போட்டியை நடத்தியது.
இதில், வெற்றி பெற்ற 8 பேர், ஜெர்மனிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள், முனிச் நகரில் உள்ள பீ.எம். டபிள்யூ வாகன சுற்றுப் பாதையில், சந்தையில் வெளிவருவதற்கு முன்பாகவே, இப்புதிய காரை ஓட்டிப் பார்க்கும் அனுபவத்தை பெற்றனர்.சச்சின் டெண்டுல்கர் மற்றும் எப்.ஐ.ஏ ஜி.டி.1 உலக சாம்பியனான, இந்தியாவின் அர்மான் இப்ரஹீம் ஆகியோர், வெற்றியாளர்கள், 8 பேருடன் புதிய காரை ஓட்டி மகிழ்ந்தனர்.
இது குறித்து, பீ.எம். டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் பிலிப் வொன் சார் கூறியதாவது:நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும், வாடிக்கையாளரின் அனுபவம் மற்றும் ஆர்வத்தை சார்ந்தே இருக்கும். புதிய "பீ.எம். டபிள்யூ 1' கார், ஓட்டுனர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை கொடுக்கும். எமது வாடிக்கையாளர்கள் முதன் முதலாக அத்தகைய அனுபவத்தை பெற, இந்த போட்டி வழி வகுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|