மத்திய அரசின் பருத்தி வங்கி திட்டம் உயிர் பெறாததால் ஜவுளி தொழில் முடக்கம்மத்திய அரசின் பருத்தி வங்கி திட்டம் உயிர் பெறாததால் ஜவுளி தொழில் ... ... அமெரிக்க டாலருக்கு எதிரானரூபாயின் வெளி மதிப்பு சரிவு அமெரிக்க டாலருக்கு எதிரானரூபாயின் வெளி மதிப்பு சரிவு ...
உலோக கழிவு இறக்குமதி வரியால் வாகன துறை பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2013
00:40

புதுடில்லி:உலோக கழிவு இறக்குமதி மீதான, 2.5 சதவீத வரி விதிப்பால், நாட்டின் மோட்டார் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வார்ப்பட பயிலகம் (ஐ.ஐ.எப்.,) தெரிவித்துள்ளது.உதிரிபாகங்கள்:இது குறித்து, இப்பயிலகத்தின் தலைவர் ஜி.எஸ்.அகர்வாலா கூறியதாவது:இறக்குமதியாகும் உலோக கழிவுகள் மீது, மத்திய அரசு, கடந்த மே மாதம், 2.5 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியது. இதனால், நாட்டின் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதேசமயம், கழிவு உலோகங்கள் வாயிலாக உற்பத்தி செய்யப்படும், வார்ப்படங்கள் உள்ளிட்ட, உதிரி பாகங்கள் ஏற்றுமதிக்கு, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் எவ்வித வரி விதிப்பும் செய்வதில்லை.இந்த வரிவிதிப்பால், நாட்டின், 10 ஆயிரம் கோடி டாலர் ஏற்றுமதி சந்தை மதிப்பை கொண்ட, இந்தியாவின் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நம் நாட்டிற்கு வரவேண்டிய ஏற்றுமதி ஆர்டர்கள், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு, சென்று கொண்டு உள்ளன.நம்நாட்டில், ஆண்டுக்கு, 95 லட்சம் டன் வார்ப்படங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேசமயம், சீனாவின் வார்ப்படங்கள் உற்பத்தி, ஆண்டுக்கு, 4.10 கோடி டன் என்ற அளவில் உள்ளது. அதே போன்று, சீனாவின், கார் உற்பத்தி ஆண்டுக்கு, 1.70 கோடி என்ற எண்ணிக்கையில் உள்ளது. இது, இந்தியாவில், 30 லட்சமாக உள்ளது.
வர்த்தக உபரி:சீனா அதிகளவில் ஏற்றுமதி மேற்கொள்வதால், அந்நாட்டின் வர்த்தக உபரி அதிகரித்து வருகிறது. ஆனால், நம்நாட்டின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்து வருகிறது. இது, நாட்டின் வர்த்தக பற்றாக்குறையையும், நடப்பு கணக்கு பற்றாக்குறையையும் அதிகரிக்கச் செய்கிறது.எனவே, மத்திய அரசு, மேற்கண்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, உலோக கழிவு மீதான இறக்குமதி வரியை, திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அகர்வாலா கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)