பதிவு செய்த நாள்
23 ஜூலை2013
00:46
சென்னை:நேற்று, ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 304 ரூபாய் உயர்ந்து, 20,456 ரூபாய்க்கு விற்பனையானது.சென்ற வாரத்தில் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, சர்வதேச நிலவரங்களால், நேற்று திடீரென அதிகரித்து காணப்பட்டது.கடந்த சனிக்கிழமையன்று, 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,519 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,152 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 26,945 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று, ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு, 38 ரூபாய் உயர்ந்து, 2,557 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 304 ரூபாய் அதிகரித்து, 20,456 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 405 ரூபாய் உயர்ந்து, 27,350 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 44.10 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 41,195 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், "சர்வதேச அளவில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 35 டாலர் வரை அதிகரித்ததால், இதன் விலை உயர்ந்துள்ளது' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|