பதிவு செய்த நாள்
23 ஜூலை2013
00:49
புதுடில்லி:நடப்பு ஜூலை மாதத்தில் இது வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், 300 கோடி டாலர் மதிப்பிற்கு (17 ஆயிரம் கோடி ரூபாய்) பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களை விற்பனை செய்துள்ளன.டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவடைந்து வரும் நிலையில், அன்னிய நிதி நிறுவனங்கள் அவற்றின் முதலீடுகளை விலக்கி கொண்டுள்ளது, கவலை அளிப்பதாக உள்ளது.சென்ற 19ம் தேதி வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், 11,196 கோடி ரூபாயை கடன்பத்திர சந்தையிலிருந்தும், 6,005 கோடி ரூபாயை, பங்குச் சந்தையிலிருந்தும் விலக்கி கொண்டுள்ளன.
அன்னிய நிதி நிறுவனங்கள், சென்ற ஜூன் மாதத்தில், மிகவும் அதிகபட்சமாக, 44,162 கோடி ரூபாயை பங்கு மற்றும் கடன்பத்திர சந்தைகளிலிருந்து விலக்கி கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பாண்டில் இது வரையிலுமாக, அன்னிய முதலீட்டாளர்கள், கடன்பத்திர சந்தையிலிருந்து, நிகர அளவில், 20,284 கோடி ரூபாயை விலக்கி கொண்டு உள்ளனர். அதேசமயம், பங்குசந்தைகளில், நிகர அளவில், 66,173 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|